NTA UGC - NET December 2018 PAPER 2 TAMIL Questions with keys - 21/12/2018 - second shift

Section 26 - Tamil

Q.1. "நன்றுபடு  மருங்கில்  தீதில் என்னும் தொன்றுபடு  பழமொழி" எனப்                     பழமொழியைக்  குறிப்பது 

1.   நான்மணிக்கடிகை 
2.   அகநானூறு 
3.   புறநானூறு                                          விடை : 2
4.   பழமொழி நானூறு 

Q.2.  கூடல் மாநகரில் ஆடல் வல்லான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் 64                   என முதன்முதலில் வரையறுத்தவர் 

1.    கல்லாடர் 
2.    திருவாலவாயுடையார் 
3.    சேக்கிழார்                                            விடை ; 1
4.    பரஞ்ஜோதி முனிவர் 

Q.3.  ஆண் எருமைக்குத் தொல்காப்பிய மரபியல் கூறும் பெயர் 

1.    கிடாய்  
2.    களிறு 
3.    கண்டி                                                      விடை : 3
4.    கலை

Q.4.  நூலுக்குச் சிறப்புப் பாயிரம் அமைக்கும்  மரபு மிகுதியாக வழங்கக்                     கால்கோலிட்டவர்

1.    உ .வே. சாமிநாதையர்
2.    சவுரிராயுலு நாயக்கர்
3.    மாயூரம் வேதநாயகம் பிள்ளை          விடை :  4
4.    மீனாட்சி சுந்தரம் பிள்ளை

Q 5.  அழையா விருந்தாளியை 'விளியா விருந்து' எனக் குறிப்பது

1.    நற்றிணை
2.    ஐங்குறுநூறு
3.    அகநானூறு                                                       விடை  : 4
4.    பரிபாடல்

Q.6.  'ஆடவர் பெயரும் பீடுமெழுகி அதர்தொறும்  பீலிசூட்டிய பிறங்குநிலை               நடுகல்' எனக் குறிப்பது

1.    அகநானூறு
2.    நற்றிணை
3.    பதிற்றுப்பத்து                                                  விடை : 1
4.    புறநானூறு

Q.7.  தமிழக அரசு முதன் முதலில் நாட்டுடைமையாக்கிய நூல்களின்                             ஆசிரியர்

1.    தேசியவிநாகம் பிள்ளை
2.    நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
3.    சுப்ரமணிய பாரதி                                                    விடை : 3
4.    பாரதிதாசன்

Q.8.  தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகட்கும் மேலாகத் தடை                                                   செய்யப்பட்டிருந்தது

1.    ஆரிய மாயை
2.    நீதிதேவன் மயக்கம்
3.    இராவண காவியம்                                                   விடை : 3
4.    இரணியன் அல்லது இணையற்ற வீரன்

Q.9.  ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடியோர்                 எண்ணிக்கை

1.    ஒன்பது
2.    எட்டு
3.    பத்து                                                                                  விடை : 1
4.    பன்னிரண்டு

Q.10.  நளன் சரிதம் பற்றிய குறிப்புடைய காப்பியம்

1.    சீவக சிந்தாமணி
2.    பெருங்கதை
3.    சிலப்பதிகாரம்                                                             விடை : 3
4.    மணிமேகலை

Q.11.  'இனி' என்பது வினையெச்சம் எனக் கூறியவர்

1.    சேனாவரையர்
2.    தெய்வச்சிலையார்
3.    இளம்பூரணர்                                                                 விடை : 2
4.    நச்சினார்க்கினியர்

Q.12.  தமிழின் முதல் சென்ரியூ கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்

1.    இன்குலாப்
2.    அப்துல் ரகுமான்
3.    ஈரோடு தமிழன்பன்                                                   விடை : 3
4.    மேத்தா

Q.13.  'யுகசந்தி' என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுதியவர்

1.    ஜெயகாந்தன்
2.    அசோகமித்திரன்
3.    கு.ப.ராஜகோபாலன்                                                விடை : 1
4.    புதுமைப்பித்தன்

Q.14.  சமணப் பெண் துறவியால் எழுதப் பெற்ற காப்பியம்

1.    யசோதரக் காவியம்
2.    உதயணகுமார காவியம்
3.    வளையாபதி                                                           விடை :2
4.    நாககுமார காவியம்

Q.15.  'பழமொழிப்  பதிகம்' பாடியவர்

1.    சுந்தரர்
2.    அப்பர்
3.    மாணிக்கவாசகர்                                                  விடை : 2
4.    சம்பந்தர்

Q.16.  'பொய்யில் புலவன் பொருளுரை'எனத் திருக்குறளைப் போற்றுவது

1.    சீவக சிந்தாமணி
2.    மணிமேகலை
3.    பெருங்கதை                                                            விடை : 2
4.    சூளாமணி

Q.17.  அகவற்பாவின் சிற்றெல்லை

1.    ஐந்தடி
2.    ஆறடி
3.    நாலடி                                                                    விடை : 4
4.    மூவடி

Q.18.  செய்யுளில் ஒன்றைத் தொடங்கிப் பின் அதனை முடித்தற்கு உலகறி                   பொருளைக்  கூறி முடிப்பது

1.    வேற்றுப்பொருள் வைப்பணி
2.    பொருள் பின்வருநிலையணி                    விடை : 1
3.    சங்கீரண அணி
4.    அவநுதியணி

Q.19.  சங்கப் பெண்பாற் புலவர்களுள் அரச மங்கையர் :

1.    ஆதிமந்தியார்
2.     ஒக்கூர் மாசாத்தியர்
3.    பொன்முடியார்                       
4.    பெருங்கோப்பெண்டு

இவற்றுள்:                                                        விடை : 2

1.    1, 3 சரி
2.    1, 4 சரி
3.    1, 2, 3, 4 சரி
4.    1, 2 சரி

Q.20.  ஈசனின் இணையடி நீழல் எவற்றைப்  போன்றது என்கிறார் அப்பர்

1.    பொய்கை
2.    இளவேனில்
3.    மாலை மதியம்
4.    வீணை

இவற்றுள் :                                                  விடை : 4

1.    1, 2, 4 சரி
2.    1, 2, 3 சரி
3.    1, 2, 3, 4 சரியல்ல
4.    1, 2, 3, 4 சரி

Q.21.  வைணவப் புலவர்களால் இயற்றப் பெற்றவை :

1.    நான்மணிக்கடிகை
2.    கார் நாற்பது
3.    களவழி நாற்பது
4.    திரிகடுகம்

இவற்றுள் :                                                         விடை : 1

1.    1, 2, 3, 4 சரி
2.    1, 2, 3, 4 சரியல்ல
3.    1, 2, 4 சரி
4.    1, 2, 3 சரி

Q.22.  திருஞானசம்பந்தர் பயன்படுத்திய யாப்பு வகைகள்

1.    ஏகபாதம்
2.    மாலைமாற்று
3.    யமகம்
4.    நாலடி மேல் வைப்பு

இவற்றுள் :

1.    1, 2, 3, 4 சரி
2.    1, 2, 4 சரி
3.    1,2,3,4 சரியல்ல
4.    1, 2,3 சரி                                                  விடை : 1

Q.23.  நனவோடைப் படைப்பாளிகள் அடிப்படைக் கருத்துக்கள்

1.    கடந்தகாலம் என்பது முடிந்துபோன ஒன்று
2.    வருங்காலம் என்பது புரிந்துகொள்ள முடியாதது
3.    உண்மையாக எஞ்சி நிற்பது நிகழ்காலம் மட்டுமே
4.    நிகழ்கணத்தில் நித்தியத்தின் விஸ்வரூபத்தைத் தேடிக் காண்பதே                       வாழ்க்கையின் இல்டசியம்

இவற்றுள் :

1.    1,2,3 சரி
2.    1, 2, 3, 4 சரியல்ல
3.    1, 2, 4 சரி
4.    1, 2, 3, 4 சரி                                                  விடை : 4

Q.24.  திருக்குறள் கருத்தை விளக்க எழுந்தவை

1.    இரங்கேச வெண்பா
2.    சோமேசர் முதுமொழி வெண்பா
3.    வடமலை வெண்பா
4.    குமரேச வெண்பா

இவற்றுள் :

1.    1, 2, 3, 4 சரியல்ல
2.    1, 2, 3 சரி
3.    1, 2, 4 சரி
4.    1, 2, 3, 4 சரி                                                      விடை : 3

Q.25.  வெண்பாவால் இயன்ற நிகண்டுகள்

1.    உரிச்சொல் நிகண்டு
2.    நாமதீப நிகண்டு
3.    கயாதரம் நிகண்டு
4.    அகப்பொருள் விளக்க நிகண்டு

இவற்றுள் :

1.    1, 2 சரி
2.    1, 2, 4 சரி
3.    1, 2, 3 சரி
4.    1, 2, 3, 4 சரி                                                        விடை : 1

Q.26.  கரிகாற் பெருவளத்தானைப் பட்டுடைத் தலைவனாகக் கொண்டவை

1.    சிறுபாணாற்றுப்படை
2.    பெரும்பாணாற்றுப்படை
3.    பொருநராற்றுப்படை
4.    பட்டினப்பாலை

இவற்றுள் :

1.    3, 4 சரி
2.    1, 2 சரி
3.    1, 4 சரி
4.    2, 3 சரி                                                                 விடை : 1

Q.27.  தொல்காப்பியர் கூறும் குறிப்புமொழி என்னும் கூற்றிடை வைத்த                         குறிப்பு என்பது

1.    எழுத்தோடு புணராது
2.    சொல்லோடு புணராது
3.    வெள்ளிடைமலையாகக் கருத்துரைப்பது
4.    பொருட் புறத்தது

இவற்றுள் :

1.    1, 2, 3, 4 சரி
2.    1, 2, 4 சரி
3.    1, 2, 3, 4 சரியல்ல
4.    1, 2, 3 சரி                                                          விடை : 2

Q.28.  மன்னரைத் துயில் எழுப்புவோராக மதுரைக்காஞ்சியில்                                            குறிப்பிடப்படுவோர்

1.    சூதர்
2.    மாகதர்
3.    வேதாளிகர்
4.    நாழிகை

இவற்றுள் :

1.    1, 2, 3, 4 சரியல்ல
2.    1, 2, 4 சரி
3.    1, 2, 3 சரி
4.    1, 2, 3, 4 சரி                                                     விடை : 4

Q.29.  செய்குத்தம்பி பாவலர் செய்தவை :

1.    சதாவதானம்
2.     பதிற்றுப் பத்தந்தாதி
3.    சீறாப்புராணத்திற்கு உரை
4.    வள்ளலார் புகழ் பரப்பல்

இவற்றுள்:

1.    1, 2, 4 சரி
2.    1, 2, 3 சரி
3.    1, 2, 3, 4 சரி
4.    1, 2, 3, 4 சரியல்ல                                 விடை : 3                          

Q.30.  வைத்தியநாத  தேசிகர் இயற்றியவை :

1.    இலக்கண விளக்கம்
2.    நல்லூர்ப் புராணம்
3.    திருவாரூர் பன்மணி மாலை
4.    ஞானஸ்நானம்

இவற்றுள் :

1.    1, 2, 3, 4 சரி
2.    1, 2, 3, 4 சரியல்ல
3.    1, 2, 3 சரி
4.    1, 2, 4 சரி                                                          விடை : 3

Q.31.   இராபெர்ட்  கால்டுவேல்  எழுதிய உரைநடை நூல்கள் :

1.    திருநெல்வேலி மாவட்ட வரலாறு
2.    தாமரைத் தடாகம்
3.    மயிலம்மைப் பிள்ளைத்தமிழ்
4.    அடைக்கலநாயகி வெண்கலிப்பா

இவற்றுள் :

1.    1, 2, 4 சரி
2.    1, 2, 3, 4 சரி
3.    1, 2, 3 சரி
4.    1, 3, 4 சரி                                                            விடை : 1

Q.32.  திருவெழு கூற்றிருக்கை என்னும் பெயரில் சிற்றிலக்கியம்                                         படைத்தவர்கள்:

1.    திருஞான சம்பந்தர்
2.    திருமங்கை ஆழ்வார்
3.    நக்கீர தேவநாயனார்
4.    அருணகிரிநாதர்

இவற்றுள் :

1.    1, 2, 3, 4 சரி
2.    1, 2, 4 சரி
3.    1, 2, 3, 4 சரியல்ல
4.    1, 2, 3 சரி                                                                விடை : 1

Q.33.  செய்யுளுள் அவ்வொடு சிவணும்  இறுதிகள் :

1.    கு
2.    ஐ
3.    ஆன்
4.    இ

இவற்றுள் :

1.    1, 2, 3 சரி
2.    1, 2, 3, 4 சரியல்ல
3.    1, 2, 3, 4 சரி
4.    1, 2, 4 சரி                                                                  விடை : 1

Q.34.  'செம்மை மாதர் திறம்புவதில்லை ' என்னும் பாரதி அதற்குக்                                      காரணமாக அவர்களிடம் உள்ளனவாகக் கூறுவன

1.    திமிர்ந்த ஞானச் செருக்கு
2.    யார்க்கும் அஞ்சாத நெறி
3.    நேர்கொண்ட பார்வை
4.    நிமிர்ந்த நன்னடை

இவற்றுள் :

1.    1, 2, 3 சரி
2.    1, 2, 4 சரி
3.    1, 2, 3, 4 சரியல்ல
4.    1, 2, 3, 4 சரி                                                       விடை : 4

Q.35.  உறுதிக்கூற்று (உ ) : நாவுக்கரசர் தாண்டக வேந்தர் எனப்                                             போற்றப்படுகிறார்
           காரணம் (கா ): கொச்சக ஒருபோகு எனும் பாவகையில் எழுசீர்                               கொண்டு பாடுவதில் வல்லவர் அவர் .

இவற்றுள் :

1.    (உ ) பிழை, (கா ) சரி
2.    (உ ) , (கா ) இரண்டும் பிழை
3.    (உ ), (கா ) இரண்டும் சரி
4.    (உ ) சரி , (கா ) பிழை                                      விடை : 4

Q.36.  உறுதிக்கூற்று (உ ): ' காலனும்  காலம் பார்க்கும் '  என்கிறது புறநானூறு
           காரணம்  (கா ) :  எந்தச் செயலையும் நல்ல  நேரம்   பார்த்தே சங்க                         காலத்தில்  செய்தனர்.

இவற்றுள் :

1.    (உ ), (கா ) இரண்டும் பிழை
2.    (உ ) பிழை , (கா ) சரி
3.    (உ ) சரி , (கா ) பிழை
4.    (உ ) , (கா ) இரண்டும் சரி                                  விடை : 4

Q.37.  உறுதிக்கூற்று (உ ) :சிலர்  ஆற்றும் உரையிலோ , படைக்கும்                                     கவிதையிலோ  இரட்டுற மொழிதல் அமைந்து  இன்பம் ஊட்டும் .
           காரணம் (கா ): இரு பொருள்படச் சிலேடை நயத்தோடு அமைவது அது
இவற்றுள் :

1.    (உ ), (கா ) இரண்டும் சரி
2.    (உ ) பிழை , (கா ) சரி
3.    (உ ) சரி , (கா ) பிழை
4.    (உ ), (கா ) இரண்டும் பிழை                            விடை : 1

Q.38.  உறுதிக்கூற்று (உ ) : நாட்டார்  கலைகளுள் ஒன்று  புரவியாட்டம்                             எனப்படுகிறது.
          காரணம் (கா ) : குதிரை மீது சவாரி செய்தபடியே பதின்மர் ஆடும்                            ஆட்டம்  அது .

இவற்றுள்:

1.    (உ ), (கா ) இரண்டும் சரி
2.    (உ ), (கா ) இரண்டும் பிழை
3.    (உ ) சரி (கா ) பிழை
4.    (உ ) பிழை , (கா ) சரி                                          விடை : 3

Q.39.  உறுதிக்கூற்று (உ ): பண்டு ஆடப்பெற்று வந்த பதினோர் ஆடல்களைத்               தெய்வ விருத்தி என்ப .
           காரணம் (கா ) : அவுணரால் வெல்லப் பெற்ற தெய்வங்களால்                                   மகிழ்ச்சியுண்டு  ஆடப்பெற்றவை அவை .

இவற்றுள் :

1.    (உ ) சரி , (கா ) பிழை
2.    (உ ) பிழை , (கா ) சரி
3.    (உ ) , (கா ) இரண்டும்  சரி
4.    (உ ), (கா ) இரண்டும் பிழை                                 விடை : 1


Q.40.  உறுதிக்கூற்று (உ ) : கூத்துகளும் குரவைக்கூத்து என்பது ஒன்று .
            காரணம் (கா ): மகளிர் வட்டமாக நின்று கைகோத்து ஆடுவது அது .

இவற்றுள் :

1.    (உ ) சரி , (கா ) பிழை
2.    (உ ), (கா ) இரண்டும் பிழை
3.    (உ ), (கா ) இரண்டும் சரி
4.    (உ ) பிழை , (கா ) சரி                                                விடை : 3

Q.41.  உறுதிக்கூற்று (உ ) : மதுரைக் காஞ்சியைக்  கூடற்றமில் எனவும்                             குறிப்பிடுவர்.
          காரணம்  (கா) :  நிலையாமை கூறி அரசனை உயர் நெறிக்கண்                              உய்ப்பதாக அமைந்தது அது .

இவற்றுள் :

1.    (உ ) பிழை , (கா ) சரி
2.    (உ ), (கா ) இரண்டும் சரி
3.    (உ ), (கா ) இரண்டும் பிழை
4.    (உ ) சரி , (கா ) பிழை                                               விடை : 4

Q 42.  உறுதிக்கூற்று (உ ): சிற்பங்களுள் புடைப்புச் சிற்பம் என்பது ஒரு வகை.
           காரணம் (கா ): பொருளின் முன்புறம் , பின்புறம் முதலிய முழு                                 உருவமும்  தெரிய அமைக்கப்படுவது அது .

 இவற்றுள் :

1.    (உ ) சரி , (கா ) பிழை
2.    (உ ) பிழை , (கா ) சரி
3.    (உ ) , (கா ) இரண்டும் பிழை
4.    (உ ), (கா ) இரண்டும் சரி                                     விடை : 1

Q 43.  உறுதிக்கூற்று (உ ) :  சித்திரக்காரர்  கண்ணுள் வினைஞர் என்று                             கூறப்படுகின்றனர் . 
           காரணம் (கா ):  நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்             அவரே .

இவற்றுள்:

1.    (உ ) பிழை , (கா ) சரி
2.    (உ ) , (கா ) இரண்டும் சரி
3.    (உ ) சரி , (கா ) பிழை
4.    (உ ) , (கா ) இரண்டும் பிழை                                      விடை : 2

Q 44.  உறுதிக்கூற்று (உ ) : பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று                               கைந்நிலை  எனப் பெயர் உடையது.
           காரணம் (கா): அக  ஒழுக்கம் பற்றியப் பேசுவது அது .

இவற்றுள்:

1.    (உ ) சரி ,(கா ) பிழை
2.    (உ ) பிழை , (கா ) சரி
3.    (உ ) , (கா ) இரண்டும் சரி
4.    (உ ), (கா ) இரண்டும் பிழை                            விடை: 3

Q 45.  உறுதிக்கூற்று (உ ): இசைக் கருவிகளுள் ஒன்று  இடக்கை ஆகும்.
           காரணம் (கா): வலக்கையால் தாங்கிக் கொண்டு இடக்கையால்                             வாசிக்கப்படும் பக்கவாத்தியம் அது .

இவற்றுள்:

1.    (உ ) பிழை , (கா) சரி
2.    (உ ) , (கா) இரண்டும் சரி
3.    (உ), (கா) இரண்டும் பிழை
4.    (உ) சரி , (கா) பிழை                                              விடை: 4

Q 46.  உறுதிக்கூற்று (உ ): சிவாலயங்களுள் சில , பாடல் பெற்ற தலங்கள்                       எனப்படுகின்றன .
           காரணம்(கா):   நாயன்மார்கள் நேரில்  சென்று காணாது  தமது                               பாடல்களில் பதிவு செய்துள்ள தலங்கள் அவை .

இவற்றுள்:

1.    (உ) பிழை , (கா) சரி
2.    (உ) , (கா) இரண்டும் பிழை
3.    (உ), (கா) இரண்டும் சரி
4.    (உ) சரி , (கா) பிழை                                                விடை: 4

Q 47.  உறுதிக்கூற்று (உ): புகார் நகரில் ஆலமுற்றம் இருந்ததை அகநானூறு                 வழி அறியலாம்.
           காரணம் (கா): அங்கிருந்த சிவன் கோவில் அது .

இவற்றுள்:

1.    (உ), (கா) இரண்டும் சரி
2.    (உ) சரி , (கா) பிழை
3.    (உ) பிழை , (கா) சரி
4.    (உ) , (கா) இரண்டும் பிழை                                   விடை : 1

Q 48.  உறுதிக்கூற்று (உ): கதை பொதி படைப்புக்களில் அமையும்                                     உத்திகளுள் பின்னோக்கு உத்தியும் ஒன்று .
           காரணம் (கா): கதையோட்டத்திற்கேற்ப கடந்த காலத்தில் நடந்த                           நிகழ்ச்சிகளைக் கூறி நிகழ்கால நிகழ்ச்சிக்குத் துணை நிற்கும்                             நோக்கில் கையாளப்படுவது அது .

இவற்றுள்:

1.    (உ) சரி , (கா) பிழை
2.    (உ) பிழை , (கா) சரி
3.    (உ), (கா) இரண்டும் சரி
4.    (உ), (கா) இரண்டும் பிழை                                     விடை: 3

Q 49.  உறுதிக்கூற்று (உ): ஆல் , ஏல் போன்ற விகுதிகளை உடைய                                         விளையெச்சங்கள் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படாவிடினும் அவை             சங்க இலக்கியத்தில் பயின்று வருகின்றன .
           காரணம் (கா): தொல்காப்பியத்திற்குப் பிந்தைய காலத்திலேயே                           வழக்கிற்கு வந்தவையாக அவை இருந்திருக்க வேண்டும் .

இவற்றுள்:

1.    (உ) பிழை , (கா) சரி
2.    (உ), (கா) இரண்டும் சரி
3.    (உ), (கா) இரண்டும் பிழை
4.    (உ) சரி , (கா ) பிழை                                               விடை: 2

Q 50.  உறுதிக்கூற்று (உ): ஓவியத் தொழிலுக்கு வட்டிகைச் செய்தி எனும்                         பெயரும் உண்டு .
           காரணம் (கா): துகிலிகையைக் கொண்டு ஓவியம் தீட்டுவர் .

இவற்றுள்:

1.    (உ) பிழை , (கா) சரி
2.    (உ) , (கா) இரண்டும் சரி
3.    (உ) சரி , (கா) பிழை
4.    (உ), (கா) இரண்டும் பிழை                                   விடை: 2

Q 51.  உறுதிக்கூற்று (உ): உபதேசரத்தின மாலையின்படி ,                                                       திருவாய்மொழியைக் காத்த குணாளர்கள் பிள்ளான் , நஞ்சீயர் ,                             பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை , மணவாள                         யோகி ஆகிய ஐவர் ஆவர் .
           காரணம்(கா):   குடத்திலிட்ட விளக்காக உள்ள மூலநூலைக் குன்றிலிட்ட             விளக்காக ஆக்கிய வியாக்கியானிகள் ஆவர்கள் .

இவற்றுள் :

1.    (உ), (கா) இரண்டும் சரி
2.    (உ) சரி, (கா) பிழை
3.    (உ) பிழை, (கா) சரி
4.    (உ), (கா) இரண்டும் பிழை                                    விடை: 1

Q 52.  உறுதிக்கூற்று (உ): நாட்டார் கதைப்பாடல் வடிவங்களுள்                                           கொலைச்சிந்து என்பதும் ஒன்று .
           காரணம் (கா): தற்கொலை ,விபத்து ,தொற்று நோய் , இயற்கைச்சீற்றம்             முதலியவற்றால் நேரும் உயிரிழப்பு அதற்கான காரணம் முதலியவை                 குறித்து மக்களுக்குத்  தெரிவித்து அவர்களுக்கு விழிப்பு ஊட்டும்                           பொருட்டுச் சிந்துப் பாவகையால் பாடப்படுவது அது.

இவற்றுள்:

1.    (உ) சரி , (கா) பிழை
2.    (உ) பிழை , (கா) சரி
3.    (உ), (கா) இரண்டும் பிழை
4.    (உ), (கா) இரண்டும் சரி                                              விடை: 4

Q 53.  உறுதிக்கூற்று (உ): சாத்திர நூல்களுள் சில பண்டார சாத்திரங்கள்                       எனப்படுகின்றன .
           காரணம் (கா): குறிப்பிடத்தக்க சிறப்புடைய ஆதீனச் சார்பு நூல்கள்                     அவை.

இவற்றுள் :

1.    (உ) சரி , (கா) பிழை
2.    (உ), (கா) இரண்டும் பிழை
3.    (உ) பிழை , (கா) சரி
4.    (உ), (கா) இரண்டும் சரி                                         விடை : 4

Q 54.  உறுதிக்கூற்று (உ): வேற்றுமைப் புணர்ச்சி ,  அல்வழிப் புணர்ச்சி எனப்               புணர்ச்சிகள் இருவகைப் படுத்தப்பட்டுள்ளன .
           காரணம் (கா): சந்தி மாற்றத்தில் இவ்விருவகைப் புணர்ச்சிகளுக்கும்                 இடையே குறிப்பிடத்தக்க  வேறுபாடுகள் உள்ளன.

இவற்றுள் :

1.    (உ), (கா) இரண்டும் பிழை
2.    (உ) பிழை , (கா) சரி
3.    (உ) சரி , (கா) பிழை
4.    (உ), (கா) இரண்டும் சரி                                        விடை: 4

Q 55.  நிரல்படுத்துக: ஏலாதி கூறும் உயிரின் அறுவகை அடிப்படைத்                                 தொழில்களுள் முதல் நான்கு
           1.  எடுத்தல்
           2.  நிமிர்த்தல்
           3.  முடக்கல்
           4.  நிலை

இவற்றுள்:

1.    4, 2, 3, 1
2.    1, 3, 2, 4
3.    3, 1, 4, 2
4.    2, 4, 1, 3                                                               விடை : 2

Q 56.  நிரல்படுத்துக : ஏழிசைகளில் இறுதி நான்கு
           1.  விளரி
           2.  உழை
           3.  தாரம்
           4.  இளி

இவற்றுள் :

1.    3, 1, 4, 2
2.    2, 4, 1, 3
3.    4, 2, 3, 1
4.    1, 3, 2, 4                                                              விடை : 2

Q 57.  நிரல்படுத்துக :குறிஞ்சிப்பாட்டில் கூறப்படும் மலர்களின் பட்டியலில்                   இடம்பெறும் முதல் நான்கு
           1.  ஆம்பல்
           2.  செங்கழுநீர்
           3.  செங்காந்தள்
           4.  அனிச்சம்

இவற்றுள்:

1.    4, 2, 3, 1
2.    3, 1, 4, 2
3.    1, 3, 2, 4
4.    2, 4, 1, 3                                                                  விடை: 2

Q 58.  நிரல்படுத்துக : பெரும் பஞ்சமூலங்கள்
           1.   வாகை
           2.  பெருங்குமிழ்
           3.  பாதிரி
           4.  வில்வம்
           5.  தழுதாழை

இவற்றுள்:

1.    4, 2, 5, 3, 1
2.    2, 4, 1, 5, 3
3.    3, 5, 1, 4, 2
4.    1, 3, 5, 2, 4                                                           விடை: 1

Q 59.  நிரல்படுத்துக :   நட்புகொள்ள  ஆராய வேண்டியவை
           1.   குற்றம்
           2.  குணன்
           3.  குன்றா இனன்
           4.  குடிமை

இவற்றுள்:

1.    2, 4, 1, 3
2.    3, 1, 4, 2
3.    4, 2, 3, 1
4.    1, 3, 2, 4                                                     விடை:1

Q 60.  நிரல்படுத்துக : தொல்காப்பியர் கூறும் எழுவாய் வேற்றுமையின்                           பயனிலை   வகைகளுள் முதல் நான்கு
           1.  வியங்கொள வருதல்
           2.  வினாவிற் கேற்றல்
           3.  பொருண்மை   சுட்டல்
           4.   வினைநிலை உரைத்தல்

இவற்றுள்:

1.    3, 1, 4, 2
2.    1, 3, 2, 4
3.    4, 2, 3, 1
4.    2, 4, 1, 3                                                               விடை: 1                                

Q 61.  தொல்காப்பியம் கூறும் பத்துவகை எஞ்சு பொருட் கிழவிகளுள் முதல்                 நான்கு
           1. ஒழியிசை
           2.  வினை
           3.  பெயர்
           4.  பிரிநிலை

இவற்றுள்:

1.    1, 3, 2, 4
2.    2, 4, 1, 3
3.    4, 2, 3, 1
4.    3, 1, 4, 2                                                             விடை: 3

Q 62.  நிரல்படுத்துக : வித்தியா தத்துவம் ஏழனுள் முதல் நான்கு
           1.  வித்தை
           2.  நியதி
           3.  கலை
           4.  காலம்

இவற்றுள்:

1.    4, 2, 3, 1
2.    2, 4, 1, 3
3.    1, 3, 2, 4
4.    3, 1, 4, 2                                                                 விடை: 1

Q 63.  நிரல்படுத்துக : இடும்பைக் கொள்கலமாம் மக்கள் யாக்கை                                    கொண்டிருப்பது
           1.  மூத்தல்
           2.  இறத்தல்
           3.  பிறத்தல்
           4.  பிணிபட்டு இரங்கல்

இவற்றுள்:

1.    3, 1, 4, 2
2.    2, 4, 1, 3
3.    1, 3, 2, 4
4.    4, 2, 3, 1                                                                 விடை:1

Q 64.  நிரல்படுத்துக : சீவக சிந்தாமணியின் இறுதி நான்கு இலம்பகங்கள்
           1.  பூமகள் இலம்பகம்
           2.  நாமகள்  இலம்பகம்
           3.  முக்தி இலம்பகம்
           4.  மண்மகள் இலம்பகம்

இவற்றுள்:

1.    4, 2, 3, 1
2.    2, 4, 1, 3
3.    1, 3, 2, 4
4.    3, 1, 4, 2                                                                     விடை: 2

Q 65.  நிரல்படுத்துக : பின்வரும் செய்யுள் அடிகள்
           1.  அடக்க வல்லவன் ஐய பவக்கடல்
           2. கெடுக்க வல்லதும் கெட்டவர்  தங்களை
           3.  கடக்க வல்லவன் ஆவன் கடித ரோ
           4.  எடுக்க வல்லதும் இம்மனம் என்ற தை

இவற்றுள் :

1.    3, 1, 4, 2
2.    1, 3, 2, 4
3.    2, 4, 1, 3
4.    4, 2, 1, 3                                                                   விடை : 3

Q 66.  நிரல்படுத்துக : 'அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும் ' எனத்                       தொல்காப்பியர் கூறும் பதினெட்டனுள் முதல் நான்கு
           1.  ஆண்மை
           2.  மூப்பு
           3.  குடிமை
           4.  இளமை

இவற்றுள்:

1.    1, 3, 2, 4
2.    4, 2, 3, 1
3.    3, 1, 4, 2
4.    2, 4, 1, 3                                                                 விடை: 3

Q 67.  நிரல்படுத்துக : சிலப்பதிகாரத்தின் படி ஒன்றன் வழி ஒன்று நேர்பட்டு                 நின்ற இசைக் கருவிகள்
           1.  தண்ணுமை
           2.  குழல்
           3.  ஆமந்திரிகை
           4.  யாழ்
           5.  முழவு

இவற்றுள்:

1.    4, 2, 5, 3, 1
2.    3, 5, 1, 4, 2
3.    2, 4, 1, 5, 3
4.    1, 3, 5, 2, 4                                                              விடை: 3

Q 68.  நிரல்படுத்துக : நெடுநல்வாடை கூறும் 'குன்று குளிர்ப்பன்ன                                    கூதிர்ப்பானாள் ' கொடுமைகள்
           1.  மா மேயல் மறத்தல்
           2.  பறவை பறப்பன வீழல்
           3.  மந்தி கூரல்
           4.  கறவை கன்றுகோள் ஒழிதல்

இவற்றுள்:

1.    1, 3, 2, 4
2.    3, 1, 4, 2
3.    2, 4, 1, 3
4.    4, 2, 3, 1                                                                     விடை: 1

Q 69.    நிரல்படுத்துக: நன்னூல் சிறப்புப் பாயிரம் கூறும் நான்கு எல்லைகள்
           1.  வேங்கடம்
           2.  குமரி
           3.  குடகம்
           4.  குணகடல்

இவற்றுள்:

1.    3, 1, 4, 2
2.    4, 2, 3, 1
3.    1, 3, 2, 4
4.    2, 4, 1, 3                                                                விடை: 2

Q 70.  நிரல்படுத்துக:நன்னூல் கூறும் 32 உத்திகளுள் முதல் நான்கு
           1.  நுதலிப்புகுதல்
           2.  தொகுத்துச்  சுட்டல்
           3. ஓத்துமுறை வைப்பு
           4.  வகுத்துக்  காட்டல்

இவற்றுள்:

1.    4, 2, 3, 1
2.    3, 1, 4, 2
3.    2, 4, 1, 3
4.    1, 3, 2, 4                                                                விடை: 4

Q 71.  பொருத்துக :
         (a ) மாரி வாயில்                               (1) அரசகேசரி
         (b ) மண்ணியல் சிறுதேர்             (2) முத்துத் தம்பிப் பிள்ளை
         (c ) பிரபோத சந்திரோதயம்       (3) நாவலர் ச.சோமசுந்தர  பாரதியார்
         (d ) இரகுவம்சம்                                (4)பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்

1.    (a )-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)
2.    (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
3.    (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1)
4.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)                                விடை :3

Q 72.  பொருத்துக :
          (a) வருடோலி                                       (1) ப்
          (b)  மருங்கொலி                                 (2) ர்
          (c)  மூக்கொலி                                     (3) ல்
          (d) அடைப்பொலி                               (4) ம்

1.    (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
2.    (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
3.    (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
4.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)                                     விடை: 2

Q 73.  பொருத்துக :
          (a )திருவானைக்கா உலா               (1)  தண்டபாணி  சுவாமிகள்
          (b ) திருச்செந்தில் உலா                   (2) காளமேகப் புலவர்
          (c ) திருவாரூர் உலா                           (3) பலபட்டடைச் சொக்கநாதர்
          (d ) தேவை உலா                                  (4) அந்தகக்கவி வீரராகவர்

1.    (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
2.    (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
3.    (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
4.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)                         விடை : 4

Q 74.   பொருத்துக :
        (a )  பக்தியற்றோர் கதியடையார்       (1) பத்திரகிரியார்
                தாண்டவக்கோனே
        (b ) ஊரலைந்தாலும் ஒன்றையுமே
               நாடாதே                                                   (2) இடைக்காட்டு சித்தர்
        (c )  மெய்யூரில் போவதற்கு
                வேதாந்த வீடறியேன்                        (3) அகப்பேய்ச் சித்தர்
        ( d) பெண்ணைத் தாய்போல்
               நினைத்துத் தவம் முடிப்பது
               எக்காலம்                                                 (4) அழுகுணிச் சித்தர்

1.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
2.    (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1)
3.    (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)
4.    (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)                         விடை: 4

Q 75.  பொருத்துக :
        (a ) தசரதன் குறையும்
               கைகேயி நிறையும்                            (1)டி .கே .இரவீந்திரன்
        (b ) இராவணன் மாட்சியும்
               வீழ்ச்சியும்                                              (2) வெ . பெருமாள்சாமி
        (c ) சிலப்பதிகாரம் :மறுக்கப்பட்ட
              நீதியும் மறைக்கப்பட்ட
              உண்மையும்                                          (3) நாவலர்.ச.சோமசுந்தர பாரதியார்
        (d ) மொகலாயர்களின்
              எழுச்சியும் வீழ்ச்சியும்                     (4) அ .ச.ஞானசம்பந்தன்

1.    (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)
2.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
3.    (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
4.    (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1)                           விடை: 4

Q 76.  பொருத்துக :
        (a )  பாறைக்காணம்                           (1) சீவல் விற்போருக்குரிய வரி
        (b )  புட்டகம்                                            (2) வண்ணாருக்குரிய வரி   
        (c )  எடுத்துக்காட்டுப் பச்சை         (3) தராசு செய்வோருக்குரிய வரி
        (d )  எடுத்தளவு                                      (4) தானிய விலைத் தரகருக்குரிய வரி

1.    (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)
2.    (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
3.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
4.    (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1)                         விடை: 3

Q 77.  பொருத்துக :
       (a ) க.நா. சுப்பிரமணியம்     (1) புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
       (b ) வல்லிக்கண்ணன்             (2) இலக்கியத்துக்கு ஓர்  இயக்கம்
       (c ) அ. சா.ஞானசம்பந்தன்    (3) வாழும் வள்ளுவம்
       (d ) வா.செ.குழந்தைசாமி      (4) கம்பன் புதிய பார்வை

1.    (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
2.    (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
3.    (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
4.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)                              விடை: 4

Q 78.  பொருத்துக :
        (a )  தமிழ்நாடன்                       (1) அரங்கநாதன்
        (b ) கலாப்பிரியா                     (2)   ஜகன்னாதன்
        (c ) ஞானக்கூத்தன்                  (3)  சுப்பிரமணியன்
        (d ) புவியரசு                                (4)  டி . கே. சோமசுந்தரம்

1.    (a )-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
2.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
3.    (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
4.    (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)                      விடை: 1

Q 79.  பொருத்துக :
       (a ) சிலம்பின் சிறுநகை                (1) முடியரசன்
       (b ) மாதவி காவியம்                       (2) வாணிதாசன்
       (c ) வீரகாவியம்                                 (3) தமிழ் ஒளி
       (d ) கொடிமுல்லை                           (4) சாலை இளந்திரையன்

1.    (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
2.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
3.    (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
4.    (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)                            விடை: 3

Q 80.  பொருத்துக :
        (a ) அரும்பொருள் செய்வினை        (1) ஓரம்போகியார்
              தப்பற்கும் உரித்தே                     
        (b )  முகம்தானே கொட்டிக்                (2)  ஓதலாந்தையர்
               கொடுக்கும் குறிப்பு
        (c )  பொறை எனப்படுவது                  (3) மருதநில  நாகனார்
               போற்றாரைப் பொறுத்தல்
        (d )  புதைத்தல் ஒல்லுமோ                   (4) நல்லந்துவனார்
                ஞாயிற்றது ஒளியே
                                           
1.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
2.    (a)-(2), (b)-(3), (c)-(2), (d)-(1)
3.    (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)
4.    (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1)                         விடை: 2

Q 81.  பொருத்துக :
        (a ) அல்லியம்                     (1) முருகன் அவுணரை வென்று ஆடியதைக்
                                                               காட்டுவது
        (b ) கொடுகொட்டி           (2) போர்க்கோலம் பூண்டு வந்த அவுணர்           
                                                               மோகித்து விழுந்து இறக்கும்படி திருமகள்
                                                                ஆடியதைக் காட்டுவது
        (c ) குடைக்கூத்து              (3) திரிபுரம் எரித்த மகிழ்ச்சியில் சிவன்               
                                                               கைக்கொட்டி ஆடியதைக் காட்டுவது         
        (d ) பாவை                           (4) கண்ணன் யானையின் மருப்பொடித்ததைக்
                                                               காட்டுவது .

1.    (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
2.    (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
3.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
4.    (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)                                  விடை: 2

Q 82.  பொருத்துக :
        (a ) இராமாயணம்  அகவல்            (1) வியாசகப் பெருமாளையர்
        (b ) கச்சித்திரு அகவல்                     (2) மாணிக்கவாசகர்
        (c ) கபிலர் அகவல்                              (3) பட்டினத்தார்
        (d ) கீர்த்தித்திரு அகவல்                  (4)பின்னத்தூர்   நாராயணசாமி


1.    (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
2.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
3.    (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
4.    (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)                   விடை: 1

Q 83.  பொருத்துக :
     (a ) நோக்கப்பொருள் எச்சம்        (1) கண்ணன் பாடக்கேட்டேன்
     (b ) விளைவுப்பொருள் எச்சம்      (2) கண்ணன் பாட வந்தான்
     (c )  காரணப்பொருள் எச்சம்         (3) கறைபோகத் துணியைத் துவைத்தாள்
     (d )  செய்யப்படுபொருள் எச்சம்   (4) மழை பெய்யக்குளம்  நிறைந்தது

1.    (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
2.    (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
3.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
4.    (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)                     விடை: 1

Q 84.  பொருத்துக :
      (a ) சுட்டுவிரல்                                                   (1) தேனரசன்
      (b ) ஆகாயத்துக்கு அடுத்த வீடு                 (2) அப்துல் ரகுமான்
      (c ) கைது செய்யப்பட்ட நியாயங்கள்    (3) மு. மேத்தா
      (d ) வெள்ளை ரோஜா                                      (4) பொன் செல்வகணபதி

1.    (a)-(2), (b)-(1),  (c)-(4), (d)-(3)
2.    (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
3.    (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
4.    (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)                         விடை: 2

Q 85.  பொருத்துக :
      (a ) ஆலத்தூர் கிழார்                    (1)மனையுறை மகளிர்க்கு
                                                                         ஆடவர் உயிர்
      (b ) கோப்பெருஞ் சோழன்         (2) ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்
      (c ) பாலைபாடிய                           (3) ஒருவர் செய்தி கொன்றோர்க்கு உய்தி
            பெருங்கடுங்கோ                           இல்
      (d ) உகாய்க்குடி கிழார்               (4) தீதில் யாக்கையோடு மாய்தல்   தவத்
                                                                           தலையே

1.    (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
2.    (a)-(3), (b)-(4), (C)-(1), (d)-(2)
3.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
4.    (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)                            விடை: 2

Q 86.  பொருத்துக :
        (a ) சௌமியன்                         (1) பாஷ்யம்
        (b ) சின்னக்குத்தூசி               (2) மு . கருணாநிதி
        (c )  சேரன்                                   (3) அண்ணா
        (d ) சாண்டில்யன்                    (4) தியாகராஜன்

1.     (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
2.    (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
3.    (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1)
4.    (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)                          விடை: 3

Q 87.  பொருத்துக :
        (a ) எருது                                    (1) அலுப்பும்
        (b ) எலி                                        (2) குனுகும்
        (c ) குரங்கு                                (3) எக்காளமிடும்
        (d )  புறா                                     (4) கீச்சிடும்

1.    (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
2.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
3.    (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
4.    (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)                 விடை: 4

Q 88.  பொருத்துக :
       (a ) நாலடியார்                       (1) ஹென்றி பவர்
       (b ) சிலப்பதிகாரம்              (2) எல்லிஸ்
       (c ) சீவகசிந்தாமணி          (3) போப்
       (d ) திருக்குறள்                       (4) ஆலன் டேனியல்

1.    (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
2.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
3.    (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
4.    (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)                     விடை: 4

Q 89.  பொருத்துக :
      (a ) சென்னைக் கூரியர்               (1) 1831
      (b ) தமிழ் இதழ்                                (2) 1785
      (c ) தினவர்த்தினி                           (3) 1882
      (d ) சுதேச மித்திரன்                      (4) 1856

1.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
2.    (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
3.    (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1)
4.    (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)                    விடை: 1

Q 90.  பொருத்துக :
       (a ) சாஅய்                                 (1) நோய்
       (b ) சிறுமை                              (2) ஐம்மை
       (c ) அரி                                       (3) வறுமை
       (d ) ஒற்கம்                                 (4) உள்ளதன் நுணுக்கம்

1.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
2.    (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1)
3.    (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
4.    (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)                               விடை: 4



குறிப்பு:  பின்வரும் கவிதைப் பகுதியை ஊன்றிப் படித்து அதன் பின்வரும் வினாக்களுக்கு ஏற்ற விடைகளைத்  தெரிவு செய்க .

ஊருக்கு நல்லது சொல்வேன்  - எனக்
    குண்மை தெரிந்து சொல்வேன் ;
சீறுக்கெல்  லாம்முத லாகும்  - ஒரு
       தெய்வம் துணைசெய்ய வேண்டும் .

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
    பேணி வளர்த்திடும் ஈசன் ;
மண்ணுக்குள்ளே  சிலமூடர் - நல்ல
    மாத ரறிவைக்  கெடுத்தார் .

தெய்வம்ப  லபல சொல்லிப்  - பகைத்து பகைத்
     தீயைவ  ளர்ப்பவர் மூடர் ;
உய்வத  னைத்திலும் ஒன்றாய்  - எங்கும்
    ஓர்பொரு ளாவது தெய்வம் .

யாரும்ப ணித்திடும் தெய்வம் - பொருள்
    யாவினும் நின்றிடும் தெய்வம் ;
பாருக்குள் ளேதெய்வம் ஒன்று -  இதில்
    பற்பல சண்டைகள் வேண்டா .

நிகரென்று கொட்டு முரசே ! - இந்த
    நீணிலம் வாழ்பவ ரெல்லாம் !
தகரென்று கொட்டு முரசே ! - பொய்மைச்
    சாதி வகுப்பினை யெல்லாம் .

ஒன்றென்று கொட்டு முரசே ! - அன்பில்
    ஓங்கென்று கொட்டு முரசே !
 நன்றென்று கொட்டு முரசே ! - இந்த
    நானில மாந்தருக் கெல்லாம் !


Q 91.  "கொட்டு முரசே "   எனக் கவிஞர் கூறக் காரணங்கள் :
          1.     உலக மக்கள் ஒன்றுபட்டு அன்பில் ஓங்க வேண்டும் .
          2.    மக்கள் யாவரும் ஒரு நிகர் .
          3.    மக்கள் இனங்கள் பற்பல .
          4.    சாதி  வகுப்பு எல்லாம் பொய்மை .

இவற்றுள்:

1.    1, 2, 3 சரி
2.    2, 3, 4 சரி
3.    1, 2, 4 சரி
4.    1, 3, 4 சரி                             விடை: 3

Q 92.  பொருத்துக :
       
         (a ) பெண்ணுக்கு ஞானம் வைத்தான்           (1) மூடர்
         (b ) உலகில் வாழ்பவர் அனைவரும்              (2) தெய்வம்
         (c )  சீருக்கெல்லாம் முதல்                                  (3) நிகர்
         (d ) மாதர் அறிவைக் கெடுத்தவர்                   (4) ஈசன்

1.    (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
2.    (a)-(4), (b)-(3), (c)-(2), (d)-(1)
3.    (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
4.    (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)                       விடை: 2

Q 93.  நிரல்படுத்துக :

          மூடர் எனக் கருதுதற்குரியோர்
               1.    தெய்வம் ஒன்றன்று என்போர்
               2.     பகைத்தீயை மூட்டுவோர்
               3.     மாதர்  அறிவைக் கெடுத்தோர்
               4.     தெய்வம் ஒன்றே என்பதறியோர்

இவற்றுள்:

1.    3, 1, 2, 4
2.    2, 4, 1, 3
3.    4, 1, 2, 3
4.    2, 3, 4, 1                                                 விடை: 1

Q 94.  உறுதிக்கூற்று  (உ): உயிர்கள் அனைத்திலும் தெய்வம் உறைகிறது .
           காரணம் (கா): ஓரறிவு முதல் ஆறறிவு   வரையிலான உயிர்கள்
                                          எல்லாம்  ஒரே கடவுளின் படைப்பு என மக்கள்
                                           நம்புகின்றனர் .

இவற்றுள்:

1.    (உ) சரியென்று , (கா) சரியன்று
2.    (உ) சரி , (கா) சரி
3.    (உ) சரி , (கா) சரியன்று
4.    (உ) சரியன்று  , (கா)  சரி                             விடை: 3


குறிப்பு:  பின்வரும் உரைநடைப் பகுதியை  படித்து   அதன் அடியில் கண்ட
வினாக்களுக்குரிய விடையினைத் தெரிவு செய்க.

          மனிதனுடைய    நல்வாழ்விற்கு உதவுகிற எல்லாத்  தொழில்களையும்
கலைகள் என்று கூறலாம் .  தச்சு வேலை , கருமார வேலை , உழவு முதலிய
தொழில்கள் யாவும் கலைகளே .  இப்போதுக் கலைகளுக்கு வேறுபட்டவை
அழகுக் கலைகள் .  அழகுக் கலைக்கு இன் கலை என்றும் , கவின் கலை என்றும் , நற்கலை என்றும் வேறுபெயர்கள் உண்டு .  நாகரிகமாக வாழும்
மக்கள் உண்டு, உடுத்து , உறங்குவதனோடு மட்டும்  திருப்தியடைவதில்லை .
அவர்கள் மனம் வேறு இன்பத்தை அடைய விரும்புகிறது .  அந்த இன்பத்தைத்  தருவது அழகுக் கலைகளே .  நாகரிக மக்கள்,நிறை மனம் - திருப்தி  அடைவதற்குக் துணையாயிருப்பவை  அவைதாம் .  மனிதனுடைய  மனத்தில் உணர்ச்சியை  எழுப்பி அழகையும் , இன்பத்தையும் அளிக்கிற
பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு .  மனிதன் தன்னுடைய அறிவினாலும் ,
மனோபாவத்தினாலும் , கற்பனையினாலும் அழகுக்கலைகளை அமைத்து
அவற்றின் மூலமாக உணர்ச்சியையும் அழகையும் , இன்பத்தையும் காண்கிறான்.  அழகுக்கலைகள் மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகுக் காட்ச்சியையும் , இன்ப உணர்ச்சியையும் கொடுத்து மகிழ்விக்கிற
-படியினாலே, நாகரிகம் படைத்த மக்கள் அழகுக் கலைகளைப்  போற்றுகி
-றார்கள் ; போற்றி வளர்க்கிறார்கள்; துய்த்து இன்பத்து மகிழ்கிறார்கள் .
அழகுக் கலையை  விரும்பாத மனிதனை அறிவு நிரம்பாத விலங்கு என்றே
கூறவேண்டும் .  அவனை முழு நாகரிகம் பெற்றவன் என்று கூற முடியாது. அழகுக்கலைகள் ஐந்து அவை கட்டிடக்கலை , சிற்பக்கலை , ஓவியக்கலை , இசைக்கலை , காவியக்கலை என்பன. பண்டைக்  காலத்தில் நமது   நாட்டவர் கட்டடக்கலையையும் , சிற்பக்கலையையும் ஒரே பெயரால் சிற்பக்கலை
என்று வழங்கினார்கள் .  ஆனால் கட்டடக்கலை வேறு , சிற்பக்கலை வேறு .
காவியக்கலையுடன் நாடகக்கலையும்  அடங்கும். அழகுக் கலைகளில் காவியங்களை, இசைக்கலை இரண்டையும் பண்டைத் தமிழர் இயல் , இசை,
 நாடகம்   என்ற  மூன்றாகப் பிரித்தனர். அவர்கள்  இயற்றமிழ் என்று கூறியது காவியக்கலையை .  செய்யுள் நடையிலும் , வசன நடையிலும் காவியம் அமைப்பது இயற்றமிழ் எனப்பட்டது . செய்யுளை இசையோடு பாடுவது இசைத்தமிழ் எனப்பட்டது.  இயலும் , இசையும் கலந்து ஏதேனும் கருத்தையோ, கதையையோ தழுவி வருவது நாடகத்தமிழ் எனப்பட்டது. நாடகத்தமிழில் நடனம் , நாட்டியம், கூத்து என்பனவும் அடங்கும் . எனவே அழகுக்கலைகள் ஐந்தையும் விரித்துக் கூறுமிடத்து , கட்டடக்கலை , சிற்பக்கலை, ஓவியக்கலை,இசைக்கலை, கூத்துக்கலை (நடனம் - நாட்டியம்)
காவியக்கலை , நாடகங்களை என ஏழகக் கூறப்படும். அழகுக் கலைகளின்
நோக்கமாக இருந்த போதிலும் , அவை வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு விதமாக உருவடைந்து வளர்ந்திருக்கின்றன. அந்தந்த நாட்டின் இயற்க்கை அமைப்பு , தட்பவெட்ப நிலை, சுற்றுச் சார்பு மக்களின் பழக்க , வழக்கங்கள் ,
மனோபாவம் , சமயக்கொள்கை முதலியவற்றிற்கு ஏற்றபடி அழகுக் கலைகள்  வெவ்வேறு விதமாக உருவடைந்திருக்கின்றன. எக்காரணங் களினால்  தாம் அழகுக்கலைகள் எல்லாம் எல்லா நாட்டிலும் ஒரே விதமாக இல்லாமல் வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு விதமாக உள்ளன.


          அழகுக் கலைகளை கண்ணினால் கண்டும் , காதினால் கேட்டும், உள்ளத்தினால் உணர்ந்தும் மகிழ்கிறோம் .  கண்ணால் கண்டு இன்புறத்தக்கது கட்டிடக்கலை .  பருப்பொருளாக உள்ளபடியால் , கட்டிடத்தைத் தூரத்தில் இருந்தும் கண்டு களிக்கிறோம்.  இரண்டாவதாகிய
சிற்பக்கலை மனிதன் ,விலகு, பறவை , தாவரம் முதலான உலகத்திலுள்ள
இயற்கைப் பொருள்களின் வடிவத்தையும் , கற்பனையாகக் கற்ப்பித்து
அமைக்கப்பட்ட பொருள்களின் உருவத்தையும் அழகு பட அமைப்பது .
இந்தச் சிற்பக்கலை , கட்டிடக்கலையை விட நுட்பமானது .  இதனையும் கண்ணால் கண்டு மகிழ்கிறோம் .  மூன்றாவதாகிய ஓவியக்கலை , சிற்பக்கலையை விட நுட்பமானது .  உலகத்தில் காணப்படுகிற எல்லாப்
பொருள்களின் உருவத்தையும் , உலகில் காணப்படாத கற்பனைப் பொருள்களின் வடிவத்தையும் பலவித நிறங்களினாலே அழகுபட எழுதப்படுகிற படங்களே ஓவியக்கலையாம்.  முற்காலத்தில் சுவர்களிலும் ,துணிகளிலும் ஓவியங்கள் எழுதப்பட்டன.  படம் என்னும் சொல் படாம் (துணி) என்னும் சொல்லிலிருந்து உண்டாயிற்று . இதனையும் அருகில் இருந்து கண்ணால் கண்டு மகிழ்கிறோம் .  நான்காவதாகிய இசைக் கலையைக்  கண்ணால் காண முடியாது.அது காதினால் கேட்டு இன்புறத்தக்கது .  ஐந்தாவதாகிய காவியக்கலை மேற்க்கூறிய கலைகள் எல்லாவற்றிலும் மிக நுட்பமுடையது .  ஏனென்றால் , இக்காவியக்கலையை
கண்ணால் கண்டு இன்புற முடியாது.  காதினால் கேட்க்கக்கூடுமாயினும் ,
கேட்பதனாலே மட்டும் மகிழ முடியாது. காவியக்கலையைத்  துய்ப்பதற்கு
மன உணர்வு மிக முக்கியமானது.  மனத்தினால் உணர்ந்து அறிவினால் இன்புற வேண்டும்.  ஆகையினாலே , காவியக்கலை , கலைகளில் சிறந்த நுண்கலை என்றும் , மென்கலை என்றும் கூறப்படுகிறது.இசைக்கலையோடு
தொடர்புடைய நடனம் , நாட்டியம் , கூத்து என்பனவும் காவியக்கலையுடன்
தொடர்புடைய நாடகமும் கண்ணால் கண்டு காதால் கேட்டும் மகிழத்தக்கன.

Q 95.  உறுதிக்கூற்று (உ): கலைகளுக்கெல்லாம் கெடுமுடியாகத் திகழ்வது
                                                   ஓவியம் .
          காரணம்(கா): மனத்தினால் உணர்ந்து அறிவினால் இன்புறப்பாலது                                                  அது.

இவற்றுள்:

1.    (உ) சரி , (கா) சரி
2.    (உ) சரியன்று , (கா) சரி
3.    (உ) சரியன்று , (கா) சரியன்று
4.    (உ) சரி , (கா) சரியன்று                                       விடை: 3

Q 96.  பொதுக்கலையினின்றும் வேறாய கலையின் ஒருபொருட்                                         பொன்மொழிகள் :
          1.  நற்கலை
          2.  அழகுக்கலை
          3.  நறுங்கலை
          4.  கவின்கலை

இவற்றுள்:

1.    1, 2, 3 சரி
2.    1, 2, 4 சரி
3.    1, 2, 3, 4 சரி
4.    1, 3, 4 சரி                                                             விடை:2

Q 97.  நிரல்படுத்துக: இன்கலைகள்
           1.  காவியம்
           2.  கட்டடம்
           3.  ஓவியம்
           4.  சிற்பம்
           5.  இசை

இவற்றுள்:

1.    2, 5, 1, 4, 3
2.    2, 4, 3, 5, 1
3.    2, 4, 1, 5, 3
4.    2, 1, 3, 5, 4                                                                விடை: 2

Q 98.  உறுதிக்கூற்று(உ): மனிதர்களுள் சிலர் அறிவு நிரம்பாத விலங்கு எனக்
                                                  கூறத்தக்கவர்கள்.
          காரணம்(கா):  அழகுக் கலைகளை அவர்கள் போற்றுகிறார்கள் .

இவற்றுள்:

1.    (உ) சரியன்று , (கா) சரியன்று
2.    (உ) சரியன்று, (கா) சரி
3.    (உ) சரி, (கா) சரி
4.    (உ) சரி , (கா) சரியன்று                                       விடை: 4

Q 99.  மனித நல்வாழ்விற்கு உதவும் தொழில்

1.    நாடகம்
2.    கூத்து
3.    கலை
4.    மென்கலை                                            விடை: 3

Q 100.  பொருத்துக :
            (a ) நாட்டியம்                                     (1) காட்சி
            (b ) காவியம்                                       (2) செவிப்புலன் இன்பம்
            (c ) இசை                                              (3) உள்ள உவகை
            (d ) கட்டடம்                                         (4) கட்புலன் , செவிப்புலன் இன்பம்

1.    (a)-(4), (b)-(3), (c)-(2), (d)-(1)
2.    (a)-(4), (b)-(2), (c)-(3), (d)-(1)
3.    (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)
4.    (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)                               விடை: 1.

                                   


































           
 






















Comments

Popular posts from this blog

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பழந்தமிழ் இலக்கியங்கள் ---- எட்டுத்தொகை ... பகுதி 1