பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

"நாலடி  நான்மணி நானாற்ப தைந்திணைமுப் 
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் 
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே 
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு "

1. நாலடியார்(நீதி நூல் )   2.நான்மணிக்கடிகை(நீதி நூல்)   
3.  இன்னா நாற்பது(நீதி நூல்) 4.  இனியவை நாற்பது(நீதி நூல்)  
5.  கார் நாற்பது(அக நூல் )  6.  களவழி நாற்பது (புற நூல்)
7.  ஐந்திணை ஐம்பது(அக நூல்)   8.  ஐந்திணை எழுபது(அக நூல்)  
9. திணைமொழி ஐம்பது(அக நூல்) 10. திணைமாலை நூற்றைம்பது(அக நூல்)  11.  திருக்குறள்(நீதி நூல் ) 12.  திரிகடுகம்(நீதி நூல்) 
13. ஆசாரக்கோவை(நீதி நூல்)   14.  பழமொழி நானூறு (நீதி நூல்)
15.  சிறுபஞ்சமூலம் (நீதி நூல் )  16.  கைந்நிலை(அக நூல்)   
17.  முதுமொழிக்காஞ்சி (நீதி நூல்) 18.  ஏலாதி (நீதி நூல்).

குறிப்பு : பதினெண் கீக்கணக்கு நூல்களில் "இன்னிலை "  சேர்க்கப் 
பட்டுள்ளதா இல்லையா என்பது ஒரு சர்ச்சசைக்கு உரிய விசயமாக உள்ளது .
"இன்னிலை" யை சேர்த்தால் ,"கைந்நிலை " சேராது . கைந்நிலையை 
சேர்த்தால் இன்னிலை சேராது.  ஆனால் மேற்கூறிய நூற்பா 
"இன்னிலைய காஞ்சியோ டேலாதி " என குறிப்பதால் இன்னிலைதான் 
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் சேரும் என்று ஒருசாராரும், 
அதே நூற்பாவில் "கைந்நிலைய வாக்குகீழ்க் கணக்கு " என வருதலால் 
கைந்நிலை தான்  வரும் என மறு சாராரும் கூறுகின்றனர். ஆனால் எவரும் 
இவை சங்க இலக்கியம் இல்லை என சொல்லவில்லை . 

           "இன்னிலைய காஞ்சியோடு " என்பதை 'இனிய நிலையையுடைய 
காஞ்சி' என்று காஞ்சிக்கு அடைமொழியாக ஏற்கவேண்டும் என கூறு 
கிற்றனர் அறிஞர் பெருமக்கள். மறுசாரார் இன்னிலை யையும் சேர்த்து 
கூறவேண்டும் என்கிறார்கள்.
    
 *  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 
                       நீதிநூல்கள் 11 , 
                       அகநூல்கள் 5,
                       புற நூல்கள் 1(இன்னிலையை சேர்த்தால் புறநூல் 2)

*  சங்கம் மருவிய கால இலக்கியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
      பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 
*  நான்காம் தமிழ்ச் சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
    கி.பி.470 இல் 
*  நான்காம் தமிழ்ச்சங்கம் யாரால் தொடங்கப்பட்டது ?
     வச்சிர நந்தி 
*  வச்சிர நந்தி எந்த சமயத்தினை சார்ந்தவர் ?
      சமணம் 
*  வச்சிர நந்தியால் ஆரம்பிக்கப்பட்ட சங்கத்தின் பெயர் என்ன?
      திராவிட சங்கம் 
*  திராவிட சங்கத்து நூல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன  ?                                    பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 
*  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயரால் வழங்கப்படும்                  நூல்கள் யாவை ?
      திரிகடுகம், சிறுபஞ்ச மூலம் , ஏலாதி 
* கீழ்க்கணக்கு நூல்களின் காலம் என்ன?
       கி.பி.100 - 700 
*  இரட்டை அற நூல்கள் என்று அழைக்கப்படுவது?
         இன்னா நாற்பது (கபிலர் )
         இனியவை நாற்பது (பூதஞ்சேந்தனார்)
*  மேற்கணக்கு நூல்களின் மரபு என்ன?
      வெண்பா ,ஆசிரியபா , கலிப்பா, வஞ்சிப்பா ,மருட்பா என்னும் ஐந்து 
      பாக்களிலும்  இலக்கண மரபுப்படி 50 முதல் 500 வரையுள்ள செய்யுட்களை  பாடி அமைப்பது .
*கீழ்க்கணக்கு நூல்களின் மரபு என்ன?
      வெண்பா யாப்பில் வந்து, ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளைக்        கொண்டு  வரும். அறம் ,பொருள், இன்பம் , என்னும் மூன்றையோ அல்லது ஒன்றையோ கொண்டு வருவது கீழ்க்கணக்கு .
*  மேல்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்களுக்கு இலக்கண நூல் எது?
      பன்னிரு பாட்டியல் 
*  தொல்காப்பியர் கூறும் 'அம்மை ' என்னும் வனப்பு பெற்ற நூற்கள் 
      நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது 
*  இருண்ட காலத்து விருத்தங்கள் - கிளி விருத்தம், எலி விருத்தம், நரி                      விருத்தம் ஆகிய மூன்றும்.
*  இன்னிலை பாடியவர் - பொய்கையார் 
*  இன்னிலையை முதலில் பதித்தவர் - வ.உ.சி.
*  இன்னிலை புறம் பற்றிய நூல் ஆகும் .
*  இன்னிலை 45 பாடல்களைக் கொண்டது.   ,அறப்பால் பத்தும் ,பொருட்பால்  ஒன்பதும் , இன்பப்பால் பன்னிரண்டும் , வீட்டிலக்கப்பால் ஆக மொத்தம் 45 வெண் பாக்களைக் கொண்டது. (கடவுள் வாழ்த்து நீங்கலாக )
* இன்னிலையின் கடவுள் வாழ்த்து பாடியது 
     பாரதம் பாடிய பெருந்தேவனார் 
*  இன்னிலையை தொகுத்தவர் - மதுரையாசிரியர் பூதனார் 
*  நாலடியாரை எழுதியவர்கள் - 400 சமண முனிவர்கள்.
*  வேளாண் வேதம் என்று அழைக்கப்படுவது 
      நாலடியார் 
*  திருக்குறளுக்கு இணையாக பேசப்படும் கீழ்க்கணக்கு நூல் 
     நாலடியார் 
*   முத்தரையர் என்னும் பிரிவினரைப் பற்றிக் கூறும் நூல் 
       நாலடியார் 
*  நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
      ஜி .யூ .போப் 
*  'ஆலும் வேலும் பல்லுக்குறுதி ; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' -                      இக்கூற்று பெருமை பாடும் நூல்கள் எவை?
      நாலடியார், திருக்குறள் .
*  நாலடியாரைத் தொகுத்தவர் யாராக இருக்கலாம் என்று இலக்கியங்கள் 
   கூறுகின்றன?     -  பதுமனார் 
*  நாலடியார் எவ்வாறு பகுக்கப்பட்டுள்ளது?
     அறத்துப்பால் 13 அதிகாரங்கள் 
     பொருட்பால்   24 அதிகாரங்கள் 
      காமத்துப்பால் 3 அதிகாரங்கள் 
*  "பொன்கலத்துப் பெய்த புலிஉகிர் வான்புழுக்கல் 
      அக்காரம் பாலோடு அமரார்கைத்து 
      உண்டலின் உப்பிலிப் புற்கை உயிர்போல் இளைஞர் 
      மாட்டு எக்காலத்தானும் இனிது "  --  நாலடியார் 
*  "பெரியவர் கேண்மை மறைபோல நாளும் 
     வரிசை வரிசையா நந்தும் - வரிசையால் 
      வானூர் மதியம் போல் வைகலும் தேயும் 
      தானே சிறியார் தொடர்பு "  -  நாலடியார் 
*  'விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன் தவத்தின் முன் நில்லாதாம் 
     பாவம் ' இடம்பெறுவது -  நாலடியார் 
*  நான்மணிக்கடிகையை இயற்றியவர் யார்?
      விளம்பி நாகனார் 
*  நான்மணிக்கடிகையின் மொத்தப் பாடல் எண்ணிக்கை -103 ( இந்நூலின் இரண்டு கடவுள் வாழ்த்தினையும் சேர்த்து )
*  நான்மணிக்கடிகையின் கடவுள்வாழ்த்து யாரைப்பற்றியது
       திருமால் 
*  விளம்பி நாயனாரின் சமயம் - வைணவம் 
*  "கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும் ; மான் வயிற்று
     ஒள் அரிதாரம் பிறக்கும் ; பெருங் கடலுள்
     பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,
     நல் ஆள் பிறக்கும் குடி ?"  -இப்பாடல் இடம்பெறுவது  - நான்மணிக்கடிகை
*  "அலைக்குப்பாழ் மூத்தோரை இன்மை , தனக்குப்பாழ் கற்றறிவில்லா
     உடம்பு "  இடம்பெறுவது - நான்மணிக்கடிகை 
*  இன்னா நாற்பது ஆசிரியர் - கபிலர் 
*  இன்னா நாற்பது பாவகை - வெண்பாக்கள் 
*  இன்னா நாற்பது மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது ?
     40 + 1 ( கடவுள் வாழ்த்துப் பாடல் உட்பட 41 ) பாடல்கள்
*  இன்னா நாற்பது எதைப் பற்றி கூறுகிறது ?
      164 கூடாத செயல்கள் எவை என்பது பற்றி கூறுகிறது 
*  இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்தில் வணங்கப்படும் தெய்வங்கள் -
      சிவன், பலராமன், மாயோன், முருகன் 
*  "பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதமை இன்னா " -பாடல் வரி இடம்
    பெறும் நூல் ?    -  இன்னா நாற்பது 
*  இனியவை நாற்பதின் ஆசிரியர் - பூதஞ்சேந்தனார் 
*  "சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
      மிக்காரை சேர்தல் மிகமான முன்னினிதே
      எள்துணை யானும் இரவாது தான் ஈதல்
      எத்துணையும் ஆற்ற இனிது " இடம்பெறுவது - இனியவை நாற்பது 
*  இனியவை நாற்பதில் இடம்பெறும் கருத்துக்கள் - 124
*  இனியவை நாற்பது பாடல்கள் எந்த பாவகையை சார்ந்தது ?
    'ஊரும் கலிமா ' எனத்தொடங்கும்(8) பாடல் மட்டும் பஃறொடை                          வெண்பா .ஏனைய அனைத்தும் இன்னிசை வெண்பா.
*  நான்கு பாடல்களில்(1,3,4,5) நான்கு பொருட்களையும் ,  மீதமுள்ள பாடல்கள்
    அனைத்தும் மூன்று பொருட்களையும் சுட்டும் நூல் - இனியவை நாற்பது 
*  இனியவை நாற்பதில் கடவுள் வாழ்த்து பாடலில் இடம்பெறும் கடவுள்கள் -
      சிவன்,மால், பிரம்மன் 
*  "குழலி தளர்நடை காண்டல் இனிதே ;
      அவர் மழலை கேட்டல் அமிழ்தினும் இனிதே "  - இடம்பெறுவது
        இனியவை நாற்பது 
*  கார்நாற்பதின் ஆசிரியர் யார் ?
       மதுரை கண்ணன் கூத்தனார் 
*  கார்நாற்பது நூலிலுள்ள பாடல்கள் எத்திணையை சார்ந்தவை ?
      முல்லைத்திணை 
*  மாயோனையும் பலராமனையும் வேள்வித்தீயையும் பற்றி குறிப்பிடும்
    நூல் -  கார்நாற்பது 
*  கார்த்திகையில் விளக்கேற்றும் வழக்கம் மக்களிடையே இருந்தது                        என்பதை குறிக்கும் நூல் - கார்நாற்பது 
*  " நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
      தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
      புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
      தூதொடு வந்த மழை "  பாடல் இடம்பெறுவது -   கார்நாற்பது 
*  களவழி நாற்பதின் ஆசிரியர் -  பொய்கையார் 
*  பதினெண் கீழ்க்கணக்கில் சோழனும் அவனது படைகளும் செய்த                        வீரப்போர்  பற்றி கூறும் ஒரே நூல்  -களவழி நாற்பது 
*  களவழி நாற்பதின் வரலாற்று செய்தி என்ன?
    சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும் ,சேரமான் கணைக்கால் 
   இரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் நடைபெற்ற போரைப்                        பற்றியும் , அதில் சோழன் வெற்றி பெற்றதையும் கூறுகிறது.
* நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது
   -  ஏரோர் களவழி 
*  பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது - தேரோர் களவழி 
*  சோழ மன்னன் செங்கணானின் போர்த்திறத்தை பாடி பரிசாக தனது                நண்பனான சேர மன்னனை(கணைக்கால் இரும்பொறை ) சிறையில்                இருந்து மீட்டவர் - பொய்கையார் .
*  சோழனை "புனல் நாடன் , நீர் நாடன், காவேரி நாடன், காவேரி நீர் நாடன்,
    செங்கண்மால், செங்கண் சினமால் , செம்பியன் , புனை கழற்கால்,
    கொடித்திண்தேர் செம்பியன்,திண்தேர் செம்பியன்,சேய் , சேறு                              மொய்ம்பின் சேய் , பைம்பூண் சேய்" என்று குறித்தவர் - பொய்கையார் 
*  ஐந்திணை ஐம்பதின் ஆசிரியர் - மாறன் பொறையனார் 
*   ஐந்திணை ஐம்பது எதைப்  பற்றியது ?
       ஐந்து திணைகளைப் பற்றியது 
*  ஐந்திணை ஐம்பது பாடல் வைப்பு முறை எவ்வாறு அமைந்துள்ளது?
      முல்லை, குறிஞ்சி ,மருதம்,பாலை, நெய்தல்.
*  "சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
     பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாத்தன்
     கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
     உள்ளம் படர்ந்த நெறி "  இப்பாடல் இடம்பெறுவது -  ஐந்திணை ஐம்பது 
*  "திருவொடுங்கும் மென்சாயல் தேங்கோதை மாதர் உருவொடுங்கும்
    உள்ளுருகி நின்று "  இவ்வரிகள் இடம்பெறுவது -  ஐந்திணை ஐம்பது 
*  ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார் 
*  ஐந்திணை எழுபதின் பாடல் பிரிவுகள் எவ்வாறு அமைந்துள்ளது?
      திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் 70 பாடல்களைக் கொண்டது 
*  ஐந்திணை எழுபதில் வணக்கம் பெறும் கடவுள் யார்?
      விநாயகர் 
* பகைவரை அழித்த வீரர்களுக்கு பாலை நிலத்தில் கல் நாட்டுதல் வழக்கம்
   என்பதைக் குறிக்கும் நூல்? - ஐந்திணை எழுபது 
*  மனையறம் பூண்ட காதலர் தம் புதல்வனுக்கு ஐம்படைத்தாலி அணிவித்து
    பெயர்சூட்டி மகிழ்தல் , மணம் புரியும் காலத்தில் தலைவன் கூறும்
    உறுதிமொழிகளைத்  தலைவி ஏட்டில் எழுதிப்பெறுதல் , பரத்தையிற்
    பிரிந்த தலைவன் தலைவியின் ஊடலைத்தணிக்க பாணனைத் தூது
    அனுப்புதல் போன்ற வழக்கங்களை அறிய உதவும் நூல் -
     ஐந்திணை எழுபது 
*  "இனத்த வருங்கலை பொங்கப் புனத்த
     கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி
      யானும் அவரும் வருந்தச் சிறுமாலை
      தானும் புயலும் வரும் " இப்பாடல் இடம்பெறுவது ?
      ஐந்திணை எழுபது 
*  திணைமொழி ஐம்பதின் ஆசிரியர் யார்?
     கண்ணன் சேந்தனார் 
*  திணைமொழி ஐம்பதில் பாடல் வைப்புமுறை எவ்வாறு இருக்கிறது?
     குறிஞ்சி,பாலை,முல்லை,மருதம் ,நெய்தல்
*  "யாழும் குழலும் முழவும் இயைந்தென  ,  வீழும் அருவி விறன் மலை
     நன்னாட " இடம் பெறுவது ?
     திணைமொழி ஐம்பது 
*  திணைமொழி நூற்றைம்பதின் ஆசிரியர் - கணிமேதாவியார் 
*  திணைமாலை நூற்றைம்பதின் பாடல்கள் - 153 (கடவுள் வாழ்த்துடன் )
*  கணிமேதாவியார் எந்த சமயத்தினை சார்ந்தவர் ?
    சமணம் 
*  "பாலையாழ்ப் பாண்மகனே  பண்டுநின் நாயகற்கு
     மாலையாழ் ஓதி வருடாயோ? காலையாழ்
     செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
     நையும் இடமறிந்து நாடு ." இப்பாடல் இடம்பெறுவது
      திணைமாலை நூற்றைம்பது 
* முப்பால், உத்தர வேதம் ,தெய்வ நூல், பொதுமறை, வாயுறை வாழ்த்து,               தமிழ் மறை, பொய்யா மொழி   என்றெல்லாம் அழைக்கப்படுவது எது ?
   திருக்குறள் 
*  பதின்மர் உரை எழுதிய ஒரே நூல் - திருக்குறள் 
*  திருக்குறளுக்கு சிறப்பான உரை யாருடையது ? - பரிமேலழகர் 
*  திருக்குறளின் அதிகாரங்கள் :
            அறத்துப்பால்         38
             பொருட்பால்          70
             காமத்துப்பால்      25
                                               -------
                   மொத்தம்        133   அதிகாரங்கள்
*  "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தறிந்த குறள் "                               யாருடைய கூற்று ?   -  இடைக்காடர் 
*  "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள் "   இது
    யாருடைய கூற்று ?   -   ஓளவையார் 
*  "வள்ளுவன்  தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட
     தமிழ்நாடு" என்று பாடியவர்?   -  பாரதியார் 
*  நாயனார் , தேவர், முதற்பாவலர் , தெய்வப்புலவர், நான்முகனார்,                          மாதானுபாங்கி , செந்நாப்புலவர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
    திருவள்ளுவர் 
*   திருக்குறள் முதன் முதலில் எப்போது அச்சிடப்பட்டது ?
     1812 இல் 
* திருக்குறள் ஆங்கிலத்தில் எப்பொழுது வெளியிடப்பட்டது?
    1840 இல்
*  திருவள்ளுவர் ஆண்டு என்பது - பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட              வேண்டும்.
*  1730 இல் ஐரோப்பிய மக்களுக்கு முதலில் திருக்குறளை அறிமுகப்                          படுத்தியவர்  யார்?
      வீரமாமுனிவர் 
*  1794 இல் முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ?
      கிண்டேர்ஸ்லே 
*  உலகிலே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில்
    மூன்றாம் இடத்தை திருக்குறள் வகிக்கிறது.
*  திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்                            பட்டுள்ளது?  -  107 மொழிகளில் 
*  எந்தெந்த இந்திய மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
      குஜராத்தி, ஹிந்தி , வங்காள மொழி, கன்னடம், கொங்கணி                               மொழி,மலையாளம், மராத்தி , மணிப்புரியம் , ஒரியா,பஞ்சாபி,                     இராஜஸ்தானி , சமஸ்கிருதம், சௌராட்டிர மொழி,தெலுங்கு .
*  திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - 9
*  திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் -
     தஞ்சை  ஞானப்பிரகாசர் 
*  திருக்குறளில் உள்ள சொற்கள் - 14000
*  திருக்குறளில் இடம் பெரும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை.
*  திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்  - நெருஞ்சிப் பழம் 
*  திருக்குறளில் இடம் பெரும் ஒரே விதை - குன்றிமணி 
*  திருக்குறளில் இடம் பெற்ற  இரண்டு மரங்கள் - பனை, மூங்கில் 
*  திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
*  திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ?
     ஜி .யு .போப் 
*  திருக்குறளின் உரையாசிரியர்களில் 10 வது  யார்?
     பரிமேலழகர் 
*  திருக்குறள் நரிக்குறவர்கள் மொழியான வக்போலி மொழியிலும்                         மொழிபெயர்க்கப் பட்டுள்ளது .
*  திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர் .
*  திரிகடுகத்தின் ஆசிரியர் - நல்லாதனார் 
*  திரிகடுகம் என்பது - சுக்கு, மிளகு, திப்பிலி.
*  திரிகடுகத்தின் பாடல்களில் - மூன்று உறுதி பொருட்களை கூறுகின்றது .
*  திரிகடுகம் 101 வெண்பாக்களைக் கொண்டது.
*  "உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல் முழுமக்கள் காதலவை "
    இடம்பெறுவது ?  - திரிகடுகம் 
*  ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்? - வண்கயத்தூரைச் சார்ந்த                         பெருவாயின் முள்ளியார். 
*  ஆசாரக்கோவை என்பது - உள்ளும் புறமும் தூய்மை 
*  பெருவாயின் முள்ளியார் சார்ந்த சமயம் - சைவம் 
*  ஆசாரக்கோவையின் மொத்தப் பாடல்கள் - 101 பாடல்கள் 
*  பழமொழி நானூறின் ஆசிரியர் யார்?  - முன்றுறை அரையனார் 
*  முன்றுறை அறையனாரின் சமயம் - சமணம் 
*  'கற்றலின் கேட்டலே நன்றே '
    'பாம்பின் கால் பாம்பு அறியும் '
   'நுணலும் தன்  வாயால் கெடும் '
    'திங்களை நாய் குரைத்தற்று '
    'முள்ளினால் முள் களையுமாறு '
    'இறைத்தொறும் ஊறும் கிணறு '    -இவை அனைத்தும் பழமொழி 
     நானூறின் வரிகள் .
*  பழமொழி நானூறில் காணப்படு வரலாற்று குறிப்புகள் :
      தூங்கும் எயிலும் தொலைத்தலால் ( தூங்கெயில் எறிந்த தொடித்தோட்
      செம்பியனைக் குறித்தது)
     
      கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் (மனு நீதி
      கண்ட சோழன் )

      தவற்றை நினைத்துத்தன் கைக்குறைத்தான் தென்னவனும் (பொற்கைப்
      பாண்டியன் )

      முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் (குறுநில வள்ளல்
      பாரி,பேகன் )

      பாரி மடமகள் பாண்மகற்கு (பாரியின் மகள்)

      நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் (கரிகால் சோழன்)

      சுடப்பட்டுயிர் உய்ந்த சோழன் மகனும் (தீயினால் கொளுத்தப்பட்டும்                 அதிலிருந்து பிழைத்த இளம்சேட் சென்னி சோழன் மகனாகிய
      கரிகால் சோழன் )

      அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் (தம் புகழைப் பாடிய
      கௌதமனாருக்கு அவர் குறை தீர வேள்வி செய்த சேரன் செங்குட்டுவன் )

      *  பழமொழி நானூறில் புராணக் குறிப்புகள் :

           பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து - இராமாயணம்

            அரக்கில்லுள்பொய்யற்ற ஐவரும் போயினார் - பாரதம்

           பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா - பாரதம்

           ஆ ஆம் எனக்கெளி தென்று உலகம் ஆண்டவன் - மாவலி

           உலகலந்தாவிய அண்ணலே  - உலகம் அளந்த வாமனன்
*  சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர் யார்?  -  காரியாசான் 
*  சிறு பஞ்ச மூலத்தில் அடங்கியுள்ள பொருட்கள்    -   கண்டன் கத்திரி ,                  சிறுவழுதுணை , சிறுமல்லி, பெருமல்லி,நெருஞ்சில் .
*  சிறு பஞ்சமூலம் - 97 செய்யுள்கள், 4 அடிகள் ,5 விடயங்கள் கொண்டது
*  "மனிதன் சாதாரணமாக மயங்கும் அலகுகளை வர்ணித்து, பின் அவற்றை
    விட நூலுக்கேற்ற சொல்லழகே சிறந்தது"   என்று கூறுவது
     சிறுபஞ்ச மூலம் 
*  முதுமொழிக்காஞ்சி ஆசிரியர் யார்? - மதுரை கூடலூர் கிழார் 
*  முதுமொழிக்காஞ்சியின் படற்பிரிவு எவ்வாறு உள்ளது ? -
     10 பாக்கள் கொண்ட 10 அதிகாரங்கள் 
*  ஒவ்வொரு அதிகாரத்திலும் 'ஆர்கலியுலகத்து ' எனத் தொடங்கும் நூல்
     முதுமொழிக்காஞ்சி 
*  முதுமொழிக்காஞ்சில் இடம் பெற்றுள்ள பத்து பத்துகள் யாவை?
     சிறந்த பத்து, அறிவுப்பத்து , பழியாப்பத்து , துவ்வாப்பத்து ,
     அல்ல பத்து, இல்லைப்பாத்து , பொய்ப்பத்து , எளிய பத்து, நல்கூர்ந்த 
     பத்து, தண்டாப் பத்து.
*  மூதுரை, முதுசொல் எனப் பொருள் தருவது - முதுமொழிக்காஞ்சி 
*  காஞ்சி என்பது காஞ்சித் திணையில் தொல்காப்பியர் காட்டும் ஒரு துறை -
     'கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய முறைமை '
*  ஏலாதியின் ஆசிரியர் யார்? - கணிமேதாவியார் 
*  ஏலாதி எதனால் ஆனது -  ஏலம் , இலவங்கம், பட்டை,சிறுநாவற்ப்பூ ,
     சுக்கு,மிளகு, திப்பிலி ஆகிய அறுவகை மருந்தினால் ஆனது.
*  நீதி நூல்களில் பழைய உரை இல்லாத ஒரே நூல் - ஏலாதி 
*  'கொல்லான் கொலைபுரியான் பிறர் மனை மேல் செல்லான் சிறியார்
     இனம் சேரான் ' இடம் பெறுவது - ஏலாதி 
*  ஏலாதியில் இடம் பெற்றுள்ள  அறக்கருத்துக்கள் யாவை ?
    கொல்லாமை, புலாலுண்ணாமை, எளியோர்க்கு உணவு உடை வழங்குதல் .
*  கணிமேதாவியாரின் சமயம் - சமணம் 
*  ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன.   
*  "இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடில் வனப்பும்
     நடைவனப்பும் நாணின் வனப்பும் புடைசால்
     கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
     எழுத்தின் வனப்பே வனப்பு"  இடம்பெறுவது - ஏலாதி 
*  கைந்நிலையின் ஆசிரியர் யார் ? - புல்லங்காடனார் 
*  பாடல்களின் எண்ணிக்கை - திணைக்கு 12 ஆக மொத்தம் 60.
*  கை என்பதன் பொருள் என்ன ? - ஒழுக்கம் 
*  கைந்நிலையில் கூறப்பட்டுள்ள விசயங்கள் என்ன?
    அரிய மலைக்காட்சிகள், பாலை நிலா வெம்மை , தலைவன் தலைவி                  காதல் நிலை .
*  "வெந்த புனத்திற்கு வாசமுடைத்தாகச்
     சந்தன மேந்தி யருவி கொணர்ந்திடூஉம்
    வஞ்சமலை நாடன்"   -  கைந்நிலை 
*  கைந்நிலை பா வகை - வெண்பா
*  'ஐந்திணை அறுபது '  என்றும் கூறப்படுவது - கைந்நிலை 
*  கைந்நிலையில் உள்ள வாடா சொற்கள் யாவை?
    ஆசை, பாசம், கேசம், இரசம், இடபம், உத்தரம் போன்றன .
 
                                                   -  தேவி நாகராஜன்.

































Comments

Post a Comment

Popular posts from this blog

பழந்தமிழ் இலக்கியங்கள் ---- எட்டுத்தொகை ... பகுதி 1

NTA UGC - NET December 2018 PAPER 2 TAMIL Questions with keys - 21/12/2018 - second shift