CBSE Net exam- tamil-Nannool eluthathikaram நன்னூல் எழுத்ததிகாரம்

1.  நன்னூலின் ஆசிரியர் யார்?
          பவணந்தி முனிவர்.
2.  எழுத்திலக்ணத்தின் வகைகள் யாவை?
         எண், பெயர், முறை , பிறப்பு, உருவம், மாத்திரை,                 
         முதல்நிலை, ஈறுநிலை, இடைநிலை, போலி,
          பதம்(சொல்), புணர்பு.
3.    அகத்திலக்கணம் (எழுத்தியல்)
         எண் முதல் போலி வரையுள்ளவை.
4.      புறத்திலக்கணம் ( எழுத்தியல்)
          பதம்(சொல்), புணர்பு.
5.      பதம் புணரும் புணர்ச்சியின் வகைகள் யாவை?
           1.உயிரீற்றுப் புணரியல்
           2.மெய்யீற்றுப் புணரியல்
           3.உருபுப் புணரியல்.
6.      பதத்தின் மூவகை புணர்பு எவ்வகை உத்தியை சார்ந்தது?
          ஓத்துமுறை வைப்பு      (ஓத்து -- இயல்)
7.       எழுத்து என்றால் என்ன?
           மொழி முதல் காரணமாம் எழும் அணுத்திரள் ஒலி 
         எழுத்து ஆகும்.
8.       எழுத்தின் வகைகள் யாவை?
           முதல் எழுத்து ,சார்பு எழுத்து.
9.        'குயவன் மண்ணால் குடம் செய்தான்' -- இதில் காரணம்                      காரியம்  என்ன?
            மண் -- முதற்காரணம் ,குடம் -- காரியம்.
10.      முதல் எழுத்துகள் யாவை?
            உயிரும் மெய்யும் முதல் எழுத்துகள்.உயிர் - 12,மெய் -18.
11.      சார்பெழுத்தின் வகைகள் விரி?
            உயிர்மெய்                   - 216
            முற்றாய்தம்                -      8
             உயிரளபெடை          -    21
            ஒற்றளபெடை           -    42
             குற்றியலிகரம்         -    37
            குற்றியலுகரம்          -    36
             ஐகாரக்குறுக்கம்     -     3
             ஔகாரக்குறுக்கம் -    1
             மகரக்குறுக்கம்         -    3
            ஆய்தக்குறுக்கம்       -    2
                                                           -------
                                                           369
                                                           -------
12.       அளபெடை என்பது என்ன?
             அளவில் நீண்டு ஒலிப்பது அளபெடை.
13.       தனிநிலை  எழுத்து எது?
            ஆய்தயெழுத்து (ஃ).
14.       சுட்டெழுத்துக்கள் யாவை?    
            அ, இ, உ.
15.      வினா எழுத்துக்கள் யாவை?
             எ, யா ,ஆ , ஓ ,ஏ.
16.       ஐ , ஔ எழுத்துக்களின் இனவெழுத்துக்கள் யாவை?
            ஐ - இ ,    ஔ  -   உ
17.      எழுத்துகள் பிறக்கும் இடங்கள் யாவை?
            மார்பு,  கழுத்து,  மூக்கு , தலை.
18.      எழுத்துக்களின் பிறப்பில் தொழில் செய்யும் கருவிகள்           .          எவை எவை?
             இதழ்,  நாக்கு , பல் , அண்ணம் (மேல்வாய் )
19.       கழுத்தில் இருந்து பிறக்கும் எழுத்துக்கள் யாவை?
             உயிரெழுத்துக்கள் , இடையின மெய்யெழுத்துக்கள்.
20.       மூக்கில் இருந்து பிறக்கும் எழுத்துக்கள் யாவை?
             மெல்லின மெய்யெழுத்துக்கள்.
21.       மார்பில் இருந்து பிறக்கும் எழுத்துக்கள் யாவை?
             வல்லின மெய்யெழுத்துக்கள்.
22.       இதழ் குவிதலால் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?
            உ ,ஊ , ஒ , ஓ.
23.       நாக்கின் அடிப்பகுதி மேல்வாயின் அடியைப் 
            பொருந்துதலால் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?
            க் , ங்
24.        நாவின் நடுப்பகுதி மேல்வாயின் நடுப்பாகத்தைப்           
              பொருத்துதலால் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?
              ச் ,ஞ்
25.        நாவின் நுனிப்பகுதி மேல்வாயின் நுனியைப் பொருத்துத-
             லால் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?
               ட் , ண்
26.        மெய்யெழுத்துக்களுள் நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின்
              அடிப்பாகத்தைப் பொருத்துதலால் பிறக்கும்எழுத்துக்கள் 
              யாவை?
               த் ,ந்
27.        மேலுதடும் கீழுதடும் தம்மில் பொருந்துதலால் பிறக்கும்
              எழுத்துக்கள் யாவை?
                ப் , ம்
28.         நாக்கின் அடிப்பகுதியானது மேல்வாயின் அடிப்பகுதியை
              பொருத்துதலால் பிறக்கும் மெய்யெழுத்து எது?
               ய்
29.        மேல்வாயை நாவின் நுனி தடவுதலால் பிறக்கும்                                    மெய்யெழுத்துக்கள் யாவை?
              ஈ ,ழ்
30.        மேல்வாய்ப்பல்லை நாவின் ஓரம் தடித்துப்பொருந்துதலால்
              பிறக்கும் மெய்யெழுத்து எது?
             ல்
31.        மேல்வாயை நாவின் ஓரம் தடித்துத் தடவுதலால்பிறக்கும்
             மெய்யெழுத்து எது?
              ள்
32.        மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு சென்று பொருந்துதலால்
             பிறக்கும் மெய்யெழுத்து எது?
              வ்
33.       மேல்வாயை நாவின்நுனி நன்கு பொருந்துதலால் பிறக்கும்
             மெய்யெழுத்துக்கள் யாவை?
             ற் , ன்
34.       ஆய்தஎழுத்தின்(ஃ ) பிறப்பிடம் என்ன?
             தலை
35.       'க'  என்னும் உயிர் மெய்யெழுத்தின் பிறப்பிடங்கள் யாவை?
             க = க் + அ 
             க்  = தலை , அ = கழுத்து
36.       'ஆய்தஎழுத்து மொழிக்கு முதலிலோ இறுதியிலோ வராது.
            எப்போதும் இடையிலே வரும்' இதற்கு தொல்காப்பியரும்
            நன்னூலாரும் எந்த உத்தியில் கூறுவர்?
            தானெடுத்து மொழிதல்
37.      முற்றாய்தம் எத்தனை வகைப்படும்?
            8
38.      முற்றாய்தம் என்றால் என்ன?
           தன் ஓசையில் குறையாமல் முழுமையாக ஒலிக்கும்
39.     செய்யுளில் இசையை நிறைக்க வருதலின் அதை எவ்வாறு 
           கூறுவர்?
           செய்யுளிசை அளபெடை (அல்லது)  இசைநிறை                            அளபெடை.
40.     ஒருசொல் மற்றொரு சொல்லாய்த் திரிந்து சொல்லிசை                     நிறைவித்தற்காக அளபெடுத்தால் அதற்கு சொல்லிசை 
          அளபெடை என்று பெயர்.
41.     " செறாஅஅய் வாழிய நெஞ்சு " -- என்பதில் " றா " பெறும் 
           மாத்திரை என்ன?
           நான்கு (4 )
42.    செய்யுளில் ஓசை குறையும் போது மெய்யெழுத்து                                அளபெடுத்தால் ஒற்றளபெடை    ஆகும்.
43.     இருகுறில் கீழ் இடையிலும் ஈற்றிலும் , ஒருகுறில் கீழ் இடை
           யிலும் ஈற்றிலுமாக நான்கிடத்தும் தம் அளவில் நீண்டு 
           ஒலிக்கும் எழுத்துக்கள் யாவை?
           ங், ஞ் ,ண் ,ந் ,ம் ,ன் ,வ் ,ய், ல் , ள் ,ஃ
44.     நன்னூலார்  காலம் வரை இருந்த "புள்ளியிட்ட எ,ஒ"                               என்பதை  யார் காலத்தில் புள்ளி நீக்கி எ ,ஒ என மாற்றி 
          அமைத்தவர் யார்?
          வீரமாமுனிவர் 
45.     உயிரளபெடை பெறும் மாத்திரை அளவு என்ன?
           மூன்று
46.     இரண்டு மாத்திரை அளவு பெறுபவை எவை எவை?
           உயிர் நெடில் ,உயிர்மெய் நெடில்
47.     ஒரு மாத்திரை அளவு பெறுபவை எவை எவை?
           உயிர்க்குறில் , உயிர்மெய்க்குறில் , ஒற்றளபெடை, 
           ஐகாரக்குறுக்கம்,  ஔகாரக்குறுக்கம்
48.      அரைமாத்திரை (1/2) பெறுபவை எவை எவை?
           மெய், குற்றியலிகரம் , குற்றியலுகரம், முற்றாய்தம்
49.      கால் (1/4) மாத்திரை பெறுபவை எவை எவை?
           மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்
50.      "இயல்பு எழுமாந்தர் இமை நொடி மாத்திரை"
51.      மெய்யெழுத்துக்கள் தம்முன் பிற tமெய்யெழுத்துக்கள்
             இயைந்து வரப்பெறுவது என்ன?
             வேற்றுநிலை மெய்மயக்கம்
52.      மெய்யெழுத்துக்கள் தம்முன் தாமே இயைந்து வருவது                        என்ன?
             உடனிலை மெய்மயக்கம் 
53.      செய்யுளில் ஈறொற்றாய் மயங்கி நிற்கும் எழுத்துக்கள் 
             யாவை?
              ன் ,ண்

                                              .... தேவிநாகராஜன்...
                                   

Comments

Post a Comment

Popular posts from this blog

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பழந்தமிழ் இலக்கியங்கள் ---- எட்டுத்தொகை ... பகுதி 1

NTA UGC - NET December 2018 PAPER 2 TAMIL Questions with keys - 21/12/2018 - second shift