சிலப்பதிகாரம் (ஐம்பெருங்காப்பியங்கள் 1)
* காப்பியங்கள் சிறு காப்பியம் பெரு காப்பியம் என இரு வகைப்படும் .
* அறம் ,பொருள் ,இன்பம், வீடு ஆகிய நான்கின் பயனாய் வருவது
பெருங்கப்பியம்
* காப்பியம் குறித்த இலக்கணம் கூறும் நூல்
தண்டியலங்காரம்
* இரட்டைக் காப்பியங்கள் - சிலப்பதிகாரம் , மணிமேகலை .
* சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை - சிலப்பதிகாரம், மணிமேகலை .
* சோழர் காலத்தில் தோன்றிய பெருங் காப்பியங்கள் - குண்டலகேசி,
வளையாபதி , சீவக சிந்தாமணி .
* தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களிலேயே சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம் ஆகியவை மட்டுமே தமிழ் நாட்டுக் கதைகளை மூலக்கருவாகக் கொண்டு இயற்றப்பட்டவை.
* பிற காப்பியங்கள் யாவும் சமஸ்க்ருதம் மற்றும் பிராகிருதம் மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழ் மொழிபெயர்ப்பாகவோ இயற்றப் பட்டவை.
* சிலப்பதிகாரத்தை இயற்றியவர் -- சேர நாட்டவரான இளங்கோவடிகள்
(கி.பி. இரண்டாம் நூற்றாண்டு ) .
* சிலப்பதிகாரம் கூறும் நாயகன் நாயகி சோழநாட்டை சார்ந்த கோவலன் கண்ணகி.
* சிலம்பு கூறுவது "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ,
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் "
* பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம் .
* தேவாரம், திவ்யபிரபந்தம் , கம்பராமாயணம்,சீவக சிந்தாமணி போன்ற
நூல்கள் "விருத்தப்பா " என்னும் பா வகையை தோற்றுவிப்பதற்கு
முன்னரே வழக்கில் இருந்த "ஆசிரியப்பா " நடையில் அமைந்த சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அந்த நூல்களுக்கு முந்தியவை.
* தனது இளவரசு பட்டத்தை துறந்து தனது அண்ணன் செங்குட்டுவனுடன்
மலை வளம் காண சென்ற போது , கண்ணகியைப் பற்றிய செய்தியை
சீத்தலை சாத்தனார் மூலம் அறிந்தவர் - இளங்கோவடிகள்
* சிலம்பில் கூறப்படும் ஆறுகள் மற்றும் நகரங்கள் எவை எவை ?
ஆறுகள் - காவிரி, வைகை
நகரங்கள் - புகார் , உறந்தை, மதுரை, வஞ்சி
* சிலம்பு கூறும் இசைப்பாட்டுகள் - கானல்வரி, வேட்டுவ வரி , ஆற்றுவரி , ஊசல் வரி, கண்புகுவரி.
* சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது - புகார் கண்டம் ,
மதுரைக் காண்டம் , வஞ்சிக் காண்டம்
* கோவலனின் தந்தை பெயர் - மாசாத்துவான் எனும் செல்வந்தர் .
* கண்ணகியின் தந்தையின் பெயர் - மாநாய்கன் எனும் வணிகன் .
* மாநாய்கனின் தொழில் என்ன - நாவாய்களை கடலில் ஓட்டும் வணிகன்
* கோவலனை பாண்டியன் கொலை செய்ததை அறிந்து துறவு பூண்ட
இருவர் - மாசாத்துவான் மற்றும் மாநாய்கன் .
* கோவலன் கண்ணகி மதுரை செல்லும்போது வழித்துணையாக இருந்தவர்
யார் ? - கவுந்தியடிகள் .
* 'நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ யார்?' என யார் யாரைப் பார்த்து கூறியது - பாண்டிய மன்னன் கண்ணகியிடம்
* கவுந்தியடிகள் கோவலன் கண்ணகியை யார் வீட்டில் அடைக்கலமாகத்
தங்க வைத்தார்? - மாதரி (இடைக்குல மூதாட்டி )
* கோவலன் கொலையுண்டதை யார் மூலம் கண்ணகி அறிகிறாள் -
மாதரி .
* கண்ணகி தன் கணவன் இறந்த துயர் கேட்டு துன்புறும் போது அவளை
குரவைக் கூத்தாடி மகிழ்விக்க விழைந்தவள் - மாதரி .
* 'எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துக்களே ' இது யார் கூற்று -
பாண்டிய மன்னன்.
* கண்ணகியின் சிலம்பு மாணிக்கங்களால் ஆனது .
* புகார் காண்டத்தின் காதைகள் - 10 காதைகள் (மங்கல வாழ்த்துப் பாடல், மனையறம் படுத்த காதை , அரங்கேற்று காதை , அந்திமாலை சிறப்புசெய் காதை ,இந்திர விழவூரெடுத்த காதை , கடலாடு காதை , கானல் வரி, வேனிற்க் காதை , கனாத்திறம் உரைத்த காதை , நாடுகாண் காதை )
* திருமணத்தின் பொது கோவலன் கண்ணகி வயது என்ன - கோவலன் 16,
கண்ணகி 12.
* சோழ மன்னனின் பச்சை மலையையும் 'தலைக்கோலி ' என்னும் பட்டமும்
பெற்றவள் - மாதவி
* தனது ஆடல் திறமையினால் நாடக கணிகையருக்கு 'தலைவரிசை' என நூல்கள் விதித்த முறைமையின் படி 1008 கழஞ்சு பொன்னை ஒருநாள் முறையாகப் பெறுபவள் யார் ? - மாதவி .
* மாதவியின் மாலைக்கு கோவலன் கொடுத்த விலை - ஆயிரம் பொன் .
* புகார் நகரில் இளங்கோவடிகள் சிறப்பிக்கும் இரு இடங்கள்
மருவூர் பாக்கம் , பட்டினப் பாக்கம் .
* சிலம்பு கூறும் ஐவகை மன்றங்கள் யாவை ?
தெய்வமன்றம், இலஞ்சி மன்றம், ஒளிக்கல் மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம்.
* மாதவி சார்பாக கோவலனிடம் தூதாக சென்ற மாதவியின் தோழி
வசந்த மாலை
* கண்ணகி தான் கண்ட கனவை யாரிடம் கூறி வருந்தினாள் ?
தேவந்தி
* மதுரைக் காண்டத்தின் காதைகள் : 13
காடுகாண் காதை , வேட்டுவ வரி, புறஞ்சேரி இறுத்த காதை , ஊர்காண்
காதை , அடைக்கலக் காதை , கொலைக்களக் காதை , ஆய்ச்சியர் குரவை,
துன்ப மாலை , ஊர்சூழ் வரி, வழக்குரை காதை , வஞ்சின மாலை ,
அழற்படு காதை , கட்டுரைக் காதை போன்றன.
* கானுறை தெய்வம் வசந்த மாலையின் வடிவிலே சென்று கோவலன் கண்ணகி மதுரை போவதை தடை செய்தது.
* சிலப்பதிகாரத்தில் சாலினி தெய்வம் : சாலி என்னும் சொல் நெல்லை குறிக்கும். மறவர் இனத்தில் மகளாகப் பிறந்து சாமி ஆடி குறி சொல்பவள் . கொற்றவை தெய்வத்தை சாலினி என்றனர்.கருவுற்றிருந்த பெண்கள் யாழ், முழவு, ஆகுளி முழக்கத்துடன் சாலினிக்கு பொங்கலிட்டு படைத்தனர். விண்ணின் வடதிசை விண்மீன்கள் 7. அவற்றுள் சாலினியும் ஒன்று . இதனை வடநூலர் அருந்ததி என்பர். மற்ற விண்மீன்கள் போல் இடம் மாறி தோன்றாமல் ஒரே இடத்தில் தோன்றுவதால் மனம் மாறாத கற்புடைய பெண்ணாக உருவகம் செய்வர் .
* மாதவியின் கடிதத்தை கோவலனுக்கு கொண்டுவந்தது - கௌசிகன் (கோசிகன்) என்னும் பிராமணன் .
* கண்ணகி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தந்த இலங்கை மன்னன் -
கயவாகு (கஜபாஹு )
* கண்ணகி சிலை செய்ய இமயமலையில் இருந்து கல் எடுத்து , புனித
கங்கையில் நீராட்டி , சேர நாட்டிலுள்ள வஞ்சி நகருக்குக் கொண்டு
வந்தனர்.
* கண்ணகி தனது இடது முலையை திருகி எறிந்து மதுரை மீது வீசினாள் .
மதுரை எரிந்தது .
* மதுரை கொழுந்து விட்டு எரியும்போது அக்கினி பகவானிடம் கண்ணகி
"பிராமணர்கள், சந்நியாசிகள், கோமாதா, பத்தினி,ஸ்த்திரீக்கள் , குழந்தைகள், கிழவி, கிழவன் ஆகியோரை ஒன்றும் செய்யாதே. மற்ற எல்லா தீயவர்களை சாம்பல் ஆக்குக " என்றாள் .
"பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் , மூத்தோர் ,கிழவி எனும்
இவரைக் கைவிட்டுத் தீத்திறத்தோர் பக்கமே சேர்க "
* 'நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன் ' யார் கூற்று ?
இளங்கோவடிகள் மாடல மறையோனைப் பற்றி கூறுவது.
* இளங்கோவடிகள் கூறும் வீணைக்கு பெயர் போன ஒரு புராண புருஷர்
யார்?
நாரதர். ( 'நாரதன் வீணை நயம்தெரிபாடலும் ')
* பாண்டிய மன்னன் ஆயிரம் பொற்கொல்லர்களை கண்ணகிக்கு பலி கொடுத்தார் .
"பொன்தொழில் கொல்லர் ஈர் ஐஞ்நூற்றுவர்
ஒருமுலை குறைந்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி ".
* சேரன் செங்குட்டுவனால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ் மன்னர்களை இகழ்ந்த வட இந்திய மன்னர்கள் - கனகன் , விஜயன் .
* 'ஆடித்திங்கள் பேரிருள் பக்கத்து
அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண ' இக்கூற்று மதுரை எரியப்போவதை
முன்காலத்திலே ஆருடம் சொன்னதாக இளங்கோ கூறுகிறார் .
(ஆடி மாதம் , கிருஷ்ணபக்ஷம் ,கார்த்திகை நக்ஷத்ரம் ,வெள்ளிக்கிழமை
அன்று மதுரை சாம்பலாகும் )
* புனல் ஆறு அன்று; இது பூம்புனல் ஆறு என்று கவுந்தியடிகள் பாராட்டிய
நதி - வைகை நதி .
* "நடந்தாய் வாழி காவேரி "
* " வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி !"
- காடுகாண்காதை , சிலம்பு .
* கண்ணகி மதுரையை தீக்கிரையாக்கிய பின் அவள் முன் தோன்றிய
தெய்வம் - மதுராபதி தெய்வம் .
* கண்ணகி வானகம் எப்போது யாருடன் சென்றாள் ?
திருச்செங்குன்றத்தில் இருந்து , கோவலன் இறந்த 14 நாட்கள் கழித்து
வானவருடன் வந்த தன் கணவன் கோவலனுடன் கண்ணகி வானகம் சென்றாள் .
* கண்ணகி சிலைக்கு பூஜை செய்ய அனுமதி பெற்றவள் - தேவந்தி .
* வஞ்சிக் காண்டத்தின் காதைகள் - 7
(குன்றக் குரவை , காட்சிக் காதை , கால்கோள் காதை , நீர்ப்படைக் காதை ,
நடுநற் காதை , வாழ்த்துக் காதை , வரம் தரு காதை )
* கவுந்தியடிகளின் சமயம் - சமணம் .
* 'மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே '
- சிலம்பு.
* 'இப்பத்தினிக் கடவுளை பரவல் வேண்டும் ' என்று யார் யாரிடம் கூறியது ?
சேரனிடம் இருங்கோ வேண்மாள் கூறியது.
* சிலப்பதிகாரத்திற்கு அரும்பதவுரை எழுதியவர் - அரும்பத உரையாசிரியர்.
* சீர்பாடும் பாடல்கள் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் இடம்
பெறுகிறது.
* கண்ணகி விண்ணகம் சென்றதை குன்றக்குரவையர்கள் சேர மன்னனிடம் கூறினர் .
* தமிழ் மொழியில் முதன்முதலாக தோன்றிய காவியம் - சிலப்பதிகாரம்.
* குறிஞ்சி நில மக்களின் வாழ்க்கை சித்தரிக்கப்படுவது
குன்றக்குரவையில் * முல்லைநில மக்கள் வாழ்க்கை சித்தரிக்கப் படுவது
ஆய்ச்சியர் குரவையில்
* மருதநில மக்கள் வாழ்க்கை சித்தரிக்கப்படுவது
கானல் வரி (கடலாடு காதை )
* பாலைநில மக்கள் வாழ்க்கை சித்தரிக்கப்படுவது
வேட்டுவ வரியில்
* சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்
அடியார்க்கு நல்லார்.
* 'பிறவா யாக்கை பெரியோன் ' யார் யாரைக் கூறியது
இளங்கோவடிகள் சிவனை கூறியது * கண்ணகி வழிபாடாக அமைந்த தெய்வம் மாரியம்மன் என்றும் கூறுவர் .
* சிலம்பில் கனல் வரி விருத்தப்பா வகையை சார்ந்தது.
தேவி நாகராஜன் . ***********
Comments
Post a Comment